siruppiddy

திங்கள், 30 டிசம்பர், 2013

காரணம் கண்டுபிடிப்பு ஓட்டுநர் இல்லாது பயணித்த ரயில் -

ஓட்டுநர் இல்லாது ரயில் என்ஜின் ஒன்று தெமட்டகொடவில் இருந்து கல்கிஸ்ஸை வரை பயணித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. விசாரணை அறிக்கையின்படி ரயில் புற இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகியோரின் தவறே ரயில் தனியே பயணித்தமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

குறித்த ரயில் என்ஜின் டிசம்பர் 05ம் திகதி அதிகாலை 1.45 அளவில் தானியங்கி கல்கிஸ்ஸை வரை சென்று கொண்டிருந்த போது மறித்து நிறுத்தப்பட்டதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது. எனினும் இதனால் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படவில்லை.

சனி, 28 டிசம்பர், 2013

இளநீர்இயற்கையின் வரப்பிரசாதம்


கோடையில் உடல் சூட்டைத் தனித்துக்கொள்வதற்கு உன்னத பானம் இளநீர் ஆகும். இளநீர் மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் பரிசு. சுத்தமான, சவையான, சத்தான பானம் இது. இளநீரின் கலோரி அளவு 17.4/100 ஆகும்.குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது. இளநீரில்

 பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது. இருப்பினும் இப்புரதச் சத்தின் தரப் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.
இளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

ஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும். ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை

 உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.

சிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது

இளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.



 

வியாழன், 26 டிசம்பர், 2013

மிளிர்ந்த மெட்ரோ ரயில் வண்ண பரிசு காகித்தால்

  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாரிஸில் மெட்ரோ ரயில் விதவித வண்ண பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு உலா வந்தது.

பிரான்ஸின் பாரிஸ் நகரத்தில் லைன் 8-ல் வந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தரையிலிருந்து கூரைவரை பரிசு காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு வந்தது.
இதனுடைய புகைப்படம் டுவிட்டர் தளத்தில் “ஆபரேஷன் கிறிஸ்துமஸ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இவ்வலங்காரம் செய்ததற்கு அடிப்படை நோக்கம் இம்மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளின் முகத்தில் புன்முறுவலை கொண்டு வருவதும், அவர்களது நகைச்சுவை உணர்வை தூண்டி மகிழ்ச்சியடைய செய்வதும் ஆகும்.

ஆனால் இம்மெட்ரோ ரயிலை அலங்காரத்துடன் பயணிக்க அனுமதிக்காமல் அலங்கார காகித தாள்களை களைந்துவிட்டு, மெட்ரோ ரயிலை ஓட்டி செல்ல அதிகாரிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மாறாத சோகம் 09ஆவது ஆண்டு நினைவுதினம்.

சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்தவர்களின் 09ஆவது  ஆண்டு நினைவுதினம் நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.  இதன்போது பெருமளவான மக்கள் கலந்துகொண்டு, சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களுக்கு நினைவுகூர்ந்து   அஞ்சலி செலுத்தினர்.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி சுனாமி அனர்த்தம் ஏற்பட்டிருந்தது.

 

புதன், 18 டிசம்பர், 2013

நவற்கிரி மக்கள் இணையம் : கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது

நவற்கிரி மக்கள் இணையம் : கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது: மஸ்கெலியா வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததாகக் கூறப்படும் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய...

கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது


மஸ்கெலியா வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததாகக் கூறப்படும் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா கிலன்டில் மத்திய பிரிவு தோட்டத்தைச்  சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிகிச்சை பெற்றுவரும் இவரைப்  பார்வையிடுவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில்  வைத்தியசாலைக்கு சென்ற மேற்படி இருவரும் நோயாளியை பார்வையிடுவதற்கு  அனுமதி கோரியுள்ளனர்.  இதன்போது நோயாளியைப் பார்வையிடுவதற்குரிய அனுமதி  மேற்படி இருவருக்கும் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அலுவலக உத்தியோகத்தர்களுடன் வாய்த்தர்க்கத்தில் மேற்படி இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே  வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு மேற்படி இருவரும் வைத்தியசாலையினுள் உட்புகுந்துள்ளனர்.

இவ்வாறு உட்புகுந்த இருவரையே மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

வயிற்றுக்குள் வைத்து போதைப் பொருளை கடத்திய ஆசாமி

வயிற்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்திய வாலிபரை, ஜேர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தை சேர்ந்த வாலிபரே போதைப் பொருளை கடத்தியுள்ளார்.
ஸ்பெயினில் இருந்து ஜேர்மனிக்கு விமானம் மூலம் வந்த போது, Nuremberg விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை, சுங்க அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அங்கு எக்ஸ்ரே எடுத்த பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.
அதாவது, கேன்னபிஸ் என்ற ஒரு வித போதை பொருளை 124 பொட்டலங்களை விழுங்கியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவர்களின் மேற்பார்வையில் இந்த பொட்டாலங்களும் வெளியெடுக்கப்பட்டு, அதன் எடை 860 கிராம் என உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த குறித்த நபரை குடியிருப்பை அதிகாரிகள் சோதனையிட்டதால், அங்கும் ஊக்க மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வியாழன், 12 டிசம்பர், 2013

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது!!!


யாழ். அனலைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளடன், இவர்களிடமிருந்து 8 ரோலர் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை கரையோர காவல் படையினரும்  கடற்படையினரும் இணைந்து  மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் நேற்று புதன்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.
எட்டு ரோலர்  படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த  மீனவர்கள் 30 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும்  காங்கேசன்துறைப்

சனி, 7 டிசம்பர், 2013

மனைவிக்கு கணவன் கொடுத்த...


தூங்கிக் கொண்டிருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த பயங்கர ஷாக்

வெள்ளி, 22 நவம்பர், 2013

ஆமை ஒன்றைக் கடத்திய நால்வருக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம்


 கொடிகாமத்திலிருந்து புன்னாலைக்கட்டுவனுக்கு ஆமை ஒன்றைக் கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமத்திலிருந்து ஆமை ஒன்றுடன் சென்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த நால்வரை சாவகச்சேரி பொலிஸார் கனகன்புளியடிச் சந்தியில் நடத்திய சோதனையின்போது கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். குறித்த ஆமையை ஆற்றில் விடுமாறும் உத்தரவிட்டார் - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3061#sthash.XEmSBzPQ.dpuf

செவ்வாய், 19 நவம்பர், 2013

உலக சாதனை படைக்க விரும்பும்{காணொளி, }


பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர்

ஞாயிறு, 10 நவம்பர், 2013

மகனை பார்க்கச் சென்ற தந்தை பஸ்சில் மரணம்


பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி இன்று காலை சென்ற பஸ்சில் பயணித்தவர் ஒருவர் பஸ்சிலேய மரணித்துள்ளார்.

பொகவந்தாலவை இராணிகாடு தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய வீரன் அங்கமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி கல்வி பயிலும் தனது மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை கொண்டு செல்லும் வழியிலேயே இவர் மரணித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவரின் சடலம் தற்போது பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்;கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வியாழன், 7 நவம்பர், 2013

சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்:


 
சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்: 
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(வயது 30).
இவரது மகள் லெக்சி ஹட்சன்(வயது 4), மிகப் பெரிய நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவளது கையில் சொக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள்.

இந்நிலையில் அவளது கையில் இருந்த சொக்லேட்டை பறிக்க நாய் பாய்ந்தது.
இதனை அறியாத லெக்சி, நாயோடு சண்டையிடவே கோபத்தில் பயங்கரமாக குரைத்தபடி பாய்ந்து கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், பார்த்து அலறி கூச்சல் போட்டனர்.
விரைந்து வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.

உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்
 

செவ்வாய், 5 நவம்பர், 2013

ஞான கதை -பிரார்த்தனையின் பலன்


ஒரு ஞானி ஒரு கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கையிலே ஒரு பெண் ஓடி வந்து,தன குழந்தை உடல் நலமின்றி இருப்பதாகவும் ஞானி வந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாள். ஞானியும் அவளது வீட்டிற்கு வந்து குழந்தையைக் குணப்படுத்த பிரார்த்தனையில் ஈடுபட்டார்.உடனே அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது.ஒருவன் ஞானியிடம் கேட்டான்,'மருந்தால் குணமாகாத குழந்தை உன் பிரார்த்தனையால் குணமாகி விடுமா?'ஞானி அவனிடம்,''உனக்கு ஒன்றும் தெரியாது. நீ ஒரு முட்டாள்.'' என்றார்.அவன் அந்த ஊரில் ஒரு பெரியஆள்.எல்லோருக்கும் முன்னால் ஞானி முட்டாள் என்று சொன்னவுடன் அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது.அவன் கோபத்துடன் திட்டிக் கொண்டே ஞானியை அடிக்கப் போனான்.ஞானி பொறுமையுடன் அவனை நோக்கி வந்து,''அப்பா,நான் சொன்ன சொல் உனக்குக் கோபத்தைவரவழைக்க முடியும் என்றால்,ஏன் என் பிரார்த்தனை இக்குழந்தையைக் காப்பாற்றக் கூடாது?''என்று கேட்டார்.அவன் முகத்தைத் தொங்க விட்டவாறு வெளியேறினான்,


கவிதை



 நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
 வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே.. —
 

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கட்டுப்பாட்டு விலைஆங்கில மருந்து வகைகளுக்கு

                           
 
ஆங்கில மருந்து வகைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்து வகைகளை நிர்ணயிக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்க ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்றை அமைக்கும் படி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இரசாயன சேவைகள் பிரதிப்பணிப்பாளர், சுகாதார வழங்கல் பிரிவின் இயக்குநர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்! உயிருடன் புதைத்தனர்

 
 
பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரை அடுத்த தோபா தெக்சிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்திக்மொகல்.

நேற்று பள்ளிக்கு சென்ற இவரது 13 வயது மகள், வீடு திரும்பவில்லை.
இதற்கிடையே சிறுமியை இரண்டு கடத்தி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் தேடிப் பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்நிலையில் அங்குள்ள சாலையோரம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக விரைந்து வந்த பொலிசார், சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதில், குறித்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், கொலைக் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
 

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபல நகைக் கொள்ளையன் கைது


சுவிஸ்ஸில் பல காலமாக நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க காவல் துறை அதிகாரிகள் முயன்றபோது அதில் ஒருவர் பிடிபட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயதை எட்டிய இவர் கொள்ளையடிப்பவர்களுக்கு சிக்னல் தருவதற்காக பியு-ரிவாஜ் ஹோட்டல் வாயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2011ம் ஆண்டு மார்ச்சில் ஷ்காப்ஹுசென் இடத்திலும் உதவியிருக்கிறார்.
ஒரு அறையில் இருந்த 150 வாட்சுகள் மற்றும் 66 நகைகள் என திட்டத்திட்ட 1.8 மில்லியன் பிராங்க் மதிப்புள்ள பொருட்களை ஷ்காப்ஹுசென் ஷாப்பில் இருந்து மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை அந்த பொருட்கள் பொலிசாரல் மீட்கப்படவில்லை.
அதேபோல் 500 பிராங்க் மதிப்புள்ள நகைகளை வாவிட்டில்(Vaud) உள்ள ஹோட்டலில் திருடப்பட்டது. அதுவும் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.
கடந்த வருடம் இந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து நபர்களில் இருந்து ஒருவர் மட்டும் மொண்டேநேக்ரோவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சுவிஸ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
இந்த குற்றங்களுக்காக இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கக் கோரி சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 

வியாழன், 24 அக்டோபர், 2013

பாடசாலைகளில் விசேட தேவையுடைய கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு


விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் இயங்கும் கிழக்கிலங்கை ஸாஹிரா விசேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி மற்றும் விற்பனையை இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
விசேட தேவையுடைய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் இறைவனுக்காக செய்யும் பணி என்பதை மறந்து விடக் கூடாது.
இந்தப் பணி பொறுமையுடன் தவமிருந்து செய்யும் பணி என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கையில் விசேட தேவையுடையோர்கள் சாதாரண கல்வி நடைமுறைக்கு உள்வாங்கப்படுவதில் பல்வேறு சிரமங்கள் காணப்படுகின்ற இந்த சூழ்நிலையில் இவ்வாறான பாடசாலைகள் நடத்தப்படுவது அதிகம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உலகில் விசேட தேவையுடையோர் ஒன்றும் இயலாதவர்கள், குறையுள்ளவர்கள் என ஒதுக்கப்படக் கூடாது.

விசேட தேவையுடையோரும் சமூகத்தில் சாதாரண மக்களுடன் இணைந்து வாழ வேண்டும். ஏனெனில் இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் தாம் விரும்பியவற்றை செய்வதற்கான உரிமையும் சுதந்திரமும் உள்ளது.
அதற்கமைவாக விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் உரிமைகளும் சுதந்திரமும் உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை விசேட கவனம் செலுத்தி விரைவில் செய்து தருவேன்.

ஆகவே விசேட தேவையுடையோரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருதாமல் அவர்களுடைய நலன்கருதி சமூகத்தில் ஓர் அங்கமாக இணைத்து நாம் எல்லோரும் செயற்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இரசாயன வாயு கசிவு: 70 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்


பிலியந்தலை பகுதியில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியான இரசாயன வாயுவின் காரணமாக தொழிற்சாலைக்கு அருகில் வசித்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் களுபோவில பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பிலியந்தலை பொலிஸார் விசாரணைகள் நிறைபெறும் வரையில் குறித்த தொழிற்சாலை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஆசிரியர் கைதினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!


 
 வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும் பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன், 9 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம்பெண்


தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம் பெண் ஒருவரால் பேராபத்து நேர்ந்துள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலா தலமான பட்டாயா பகுதிக்கு, கார்த்திகேயன் கிருஷ்ணன்(வயது 36) மற்றும் காதர் பாட்சா(வயது 40) ஆகியோர் சென்றனர்.
அப்போது தாய்லாந்து பெண் ஒருவர் அவர்களை அணுகி பணம் கொடுத்தால் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு விலையை நிர்ணயித்த பிறகு கார்த்திகேயன், பாஷா ஆகியோரை அப்பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அதற்குள் ஏறுமாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் காரில் ஏறியவுடன் அவர்களை சற்றுநேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு அப்பெண் தனது நண்பரை அழைத்துள்ளார்.
அப்போது தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்கள் வந்து கார்த்திகேயன் மற்றும் பாஷாவை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வந்த கிருஷ்ணன், பாஷாவை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் பெண் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

உலக சாதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையில்?


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்தொன்றின் போது உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட ஆண் ஒருவரின் பிறப்பு உறுப்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான ஒரு குழந்தையின் தந்தை ஒருவரின் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு வைத்தியர்களும் ஏனைய வைத்தியர்களும் கூட்டாக இணைந்து துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை மீளப் பொருத்தியுள்ளனர்.

12 மணித்தியாலங்கள் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பு ஒன்றை மீளவும் பொருத்தி வழமை நிலைமைக்கு கொண்டு வந்த முதல் சந்தர்ப்பமாக இது கருதப்பட வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியை வைத்தியசாலையில் சேர்த்த நேரம், துண்டிக்கப்பட்ட உறுப்பை பாதுகாப்பாக எடுத்து வந்த விதம் ஆகியன இந்த அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவியது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்,

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபர் இயல்பு வாழக்கையை தொடர முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்று முழுதாக துண்டிக்கப்பட்டிருந்த ஆணுறுப்பு வெற்றிகரமாக மீளப் பொருத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுநீர் கழித்தல், தம்பத்ய உறவை தொடருதல் போன்ற சகல செயற்பாடுகளையும் தடையின்றி மேற்கொள்ளக் கூடிய வகையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரே ஆணுறுப்பை துண்டித்துக் கொண்டதாக அவரது மனைவி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்,

திங்கள், 7 அக்டோபர், 2013

கரைவலையி ல்மட்டக்களப்பில் 35 ஆயிரம் கிலோ பாரை மீன்கள்!


மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன.

இன்று காலை கரைவலைத் தொழில் ஈடுபட்டிருந்த போது சுமார் 35,000 கிலோ கிராம் பாரை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனை பார்வையிட அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் கூடி நின்றனர்.
இவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் டெங்கு ஒழிப்பு


டெங்கு ஒழிப்பு வார‌த்தை முன்னிட்டு யாழ். புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியில் கோப்பாய் இலங்கை வங்கி ஊழியர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்று காலை 7.00 மணியில் இருந்து 11.00 மணி வரை வங்கி முகாமையாளர் எஸ்.தவலிங்கம் தலைமையில் டெங்கு சிரமதானம் பணி நடைபெற்றது.
 

சனி, 5 அக்டோபர், 2013

அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள்விபத்து


மோட்டார் சைக்கிளினை டிப்பர் வாகனம் மோதியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாவகச்சேரி, கொரடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த யோ.கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.இவர் யாழ். பல்கலைக்கழகத்தின்

கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறை இறுதியாண்டு மாணவனாவார். குறித்த மாணவன் புத்தூரிலிருந்து கெருடாவில் நோக்கி மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பின் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்து. இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான

மாணவனை அச்சுவேலி வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசலையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சைபயனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. -

புதன், 2 அக்டோபர், 2013

அறிமுகமாகின்றது அன்ரோயிட் A.I ஸ்மார்ட் கடிகாரம்


ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது.

இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சோனி என்பவற்றினை தொடர்ந்து தற்போது அன்ரோயிட் இயங்குதளத்துடன் கூடிய A.I ஸ்மார்ட் கடிகாரங்கள் அறிமுகமாகவுள்ளன.

1.2GHz Processor, உட்பட 3G வலையமைப்பு போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள இதன் ஆரம்ப விலையானது 279 டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சனி, 28 செப்டம்பர், 2013

பலர் கைது யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய


சுன்னாகம் பொலிசாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பரவலாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதுடன் பலரின்மீது வழக்குகளும் தாக்கல் செய்யப்படவுள்ளன.

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.துஸ்மிந்தா தலைமையில் பொலிசார் தமது பிரிவுக்கு உட்பட்ட பல இடங்களிலும் இந் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

வீதிச்சோதனை நடவடிக்கைகளின் போது வீதி நடைமுறைகளை பின்பற்றாது வாகனங்களை செலுத்திய இருபத்தைந்து பேரும் மது போதையில் வாகனம் செலுத்திய இரண்டு பேரும் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மற்றும் பொது இடங்களில் இருந்து மதுப்பாவனையில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேசத்தில் பகிரங்கப் பிடியானைக்கு உள்ளாகிய ஒருவரும் மற்றும் உடுவில் குப்பிளான் பகுதிகளில் இருந்து பிடியானை பிறப்பிக்கப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் இவர்கள் இன்று நிதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலகிலேயே 2வது மிக பெரிய பயணிகள் கப்பல் !!!

 
பயணிகள் கப்பல் நீங்கள் பார்த்தால் கண்டிப்பாக வியப்படைவீர்கள்,,,வினோதம்,
{காணொளி}
}

புதன், 25 செப்டம்பர், 2013

பிறந்த நாள் வாழ்த்து:ப. செல்வகுமார்


நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்வகுமார் அவர்கள் இன்று தனது(25.09.13) இருபத்தேழாவது  பிறந்தநாளை  தனது கிராமத்து நண்பர்களுடன் இனிதே கொண்டாடுகின்றார்.இவரை குடும்ப உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இந்த உறவு இணையத்தின் ஊடாக இவரது  பிரான்ஸ் நண்பர்களான

இ.மதுசன்,உ.பாலச்சந்திரன் இருவரும்   நிறைந்த  இறை அருள் பெற்று   பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் என்றும் சீரும்சிறப்பும்பெற்று  பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இந்த உறவை http://www.navarkiri.com/ நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

பெண்ணின் சடலம் குளத்தில் : அட்டனில் சம்பவம்


அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்மூர் தோட்டத்திலுள்ள குளத்தில் பெண் ஒருவரின் சடலத்தை அட்டன் பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
அப்பகுதி வழியாக வீதி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் குழுவே இந்த சடலத்தை கண்டுப்பிடித்துள்ளது.

55 வயது மதிக்கதக்க தனலட்சுமி என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு தற்போது சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

இராட்சத மீன்!கடற்பரப்பில் பிடிபட்ட!!!


நயினாதீவு பிரதேச கடற்பரப்பில் இராட்சத மீன் ஒன்று அப்பகுதி மீனவரின் வலையில் சிக்கிய நிலையில் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீன் பிடிதொழிலுக்காக இன்று அதிகாலை நயினாதீவு பகுதியில் இருந்து சென்ற ஒருவரின் வலையிலேயே இவ் மீன் சிக்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 1000 கிலோ எடையும் கொண்ட இந்த மீனை பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.(படங்கள்)





 

புதன், 18 செப்டம்பர், 2013

யாழில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு புகைப்படங்கள் இணைப்பு

 

)யாழ். பழைய பூங்கா வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்று திறந்துவைக்கப்பட்டது. வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த சிறுவர் பூங்கா திறந்துவைக்கப்பட்டது.வட மாகாண பிரதம செயலாளர் ரமேஸ் விஜயலக்சுமி, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநநரின் நிதியொதுக்கீட்டில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள் இணைப்பு}






திங்கள், 16 செப்டம்பர், 2013

மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி பலி



பொகவந்தலாவையில் மின்சாரம் தாக்கியதில் 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வீட்டில் தனியே இருந்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற மின்ன

ழுத்தியை உபயோகிக்கும் போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

குளங்களை புனரமைத்து நெற்செய்கையினை அதிகரிக்க நடவடிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நீர்பாய்ச்சல் குளங்களை திருத்தியமைத்து அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்செய்கையின் அளவை அதிகரிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்களை விரிவுபடுத்தி அதன் கொள்ளளவை அதிகரித்து விவசாயிகளுக்கு நீர்பாய்ச்சலுக்கு தேவையான அளவில் நீரை வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நீர்பாசன மற்றும் விவசாயத் துறை அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா, மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மோகன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த குளங்களை புனரமைப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நீர்பாசனத்தினை விவசாயிகள் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டன

சனி, 14 செப்டம்பர், 2013

யாழ்தேவி சேவையை இன்று ஆரம்பித்தது


யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர் தனது சேவையை இன்று ஆரம்பித்தது.

இன்று காலை ஓமந்தை ரயில் நிலையத்திலிந்து புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.
இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்துள்ளார்.
யாழ்தேவி ரயில் சேவைகள் நாளை 15 ஆம் திகதி முதல் கிளிநொச்சிவரை நடைபெறும்.

மேலும் 15ஆம் திகதி முதல் தினமும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிளிநொச்சி வரை யாழ் தேவி உட்பட 3 ரயில்கள் பயணிக்கவுள்ளன.

அடுத்த வருடம் ஜூன் மாதமளவில் வடக்கு ரயில் போக்குவரத்து காங்கேசன்துறை வரை நடத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வியாழன், 12 செப்டம்பர், 2013

அதிர்ச்சி வைத்தியசாலை உணவில் செத்த பாம்பு: குட்டி


கேரளாவில் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணி, உடல் நலமில்லாத தனது மகனை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

அங்குள்ள உணவு விடுதியில் அவர் தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்தார். அந்த உணவு பொட்டலத்தை திறந்து பார்த்தால் அதில் ஒரு குட்டி பாம்பு செத்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்துபோனார்.

இது தொடர்பாக அவர் வைத்தியசாலை நிர்வாகத்திடம் புகார் செய்தார்.
தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த உணவு விடுதி முன்பாக கூடி போராட்டம் நடத்தினர். உடனே பொலிஸாருக்கும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும்

 வைத்தியசாலை நிர்வாகம் புகார் செய்தது. அவர்கள் விரைந்து வந்தனர்.
பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்ட உணவு விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். அதன் பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

அதைத் தொடர்ந்து அந்த உணவு விடுதியை மூட உத்தரவிடப்பட்டது. அங்கிருந்து சர்ச்சைக்குள்ளான உணவு மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

ஐரோப்பியாவிற்குள் நுழைய முயன்ற 700 பேர்!!


ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்குள் திருட்டுத்தனமாக மக்கள் குடியேறுபவர்களை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இத்தாலி கடல் வழியாக 4 படகுகள் மூலம் ஐரோப்பியவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 700 பேரை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அவர்கள் சிரியா, எகிப்து, எரிட்டிரியா, நைஜீரியா மற்றும் கானா நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் பெரும்பாலானோர் சிரியாவை சேர்ந்த அகதிகள் என்று கூறப்படுகிறது.

மிகவும் அபாயகரமான இந்த இத்தாலி மற்றும் மால்டா வழியாக கடல் வழியாக திறந்தவெளி படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்குள் செல்கின்றனர் என்று அஞ்சப்படுகிறது.

இதுபோன்று அத்துமீறி நுழைபவர்களுக்கு அடைக்கலம் தர ஐரோப்பிய யூனியன் நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று இத்தாலி கேட்டுக்கொண்டுள்ளது.
 

சனி, 7 செப்டம்பர், 2013

யாழின் பெருமையை உலகறிய செய்வோம்

 
ஆசியாவிலே பிரசித்தி பெற்ற நுாலகம்.. யாழ் நுாலகம்.
.நாம்முன்பு ஆண்டு அனுபவித்த இடங்களும்எம்பாரம்பாரியமறக்கஉணவுப்பொருள்கள்
 
 
இன்றைய காலைப்பொழுதினில் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட படம்
 
பருத்தித்துறை ஆனைவிழுந்தான்
 சந்தியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வைரவர் சூலம்....!!
 
பருத்தித்துறை தும்பளை
 நெல்லண்டை பத்திரகாளி அம்மன்
பருத்தித்துறை தும்பளை நெல்லண்டை
பத்திரகாளி அம்மன ஆலய வருடாந்த வேள்வி
 
யாழின் அழகுக்கு என்றும் பஞ்சமில்லை
“அட்சயகிருதியை” முன்னிட்டு பருத்தித்துறை நகரில் இன்று அலங்கரிக்கப்பட்ட நிலையில் நகைக்கடைகள்
 
பனங்கிழங்கு
மகிழ்வோம்
 
 
யாழ்ப்பாணத்து உற்பத்தி பொருளான பனம் கட்டி
 
யாழ்ப்பாண பலாப்பழம் சாப்பிடுவமா?
 
யாழின் பனங்காய் பணியாரம்
பப்பாசிப்பழம்
 
யாழின் திராட்சை பழத்திற்கு நல்ல மவுசு
 

சாப்பிடலாம் வாங்க !!!
 
 
யாழ்ப்பாணத்து பிரபலமான நாவல் பழம்
 
இயற்கையில் நம்ம யாழ்ப்பாணம்

 

நவற்கிரி காலநிலை