siruppiddy

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஆசிரியர் கைதினை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!


 
 வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனால் மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும் பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை