siruppiddy

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பிரபல நகைக் கொள்ளையன் கைது


சுவிஸ்ஸில் பல காலமாக நகைகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க காவல் துறை அதிகாரிகள் முயன்றபோது அதில் ஒருவர் பிடிபட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
38 வயதை எட்டிய இவர் கொள்ளையடிப்பவர்களுக்கு சிக்னல் தருவதற்காக பியு-ரிவாஜ் ஹோட்டல் வாயிலில் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதமும், 2011ம் ஆண்டு மார்ச்சில் ஷ்காப்ஹுசென் இடத்திலும் உதவியிருக்கிறார்.
ஒரு அறையில் இருந்த 150 வாட்சுகள் மற்றும் 66 நகைகள் என திட்டத்திட்ட 1.8 மில்லியன் பிராங்க் மதிப்புள்ள பொருட்களை ஷ்காப்ஹுசென் ஷாப்பில் இருந்து மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை அந்த பொருட்கள் பொலிசாரல் மீட்கப்படவில்லை.
அதேபோல் 500 பிராங்க் மதிப்புள்ள நகைகளை வாவிட்டில்(Vaud) உள்ள ஹோட்டலில் திருடப்பட்டது. அதுவும் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை.
கடந்த வருடம் இந்த கும்பலைச் சேர்ந்த ஐந்து நபர்களில் இருந்து ஒருவர் மட்டும் மொண்டேநேக்ரோவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சுவிஸ் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
இந்த குற்றங்களுக்காக இவருக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கக் கோரி சுவிஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை