திங்கள், 28 ஜூலை, 2014
செவ்வாய், 15 ஜூலை, 2014
நண்பனை கசூரினாக் கடலில்அமிழ்த்திக் கொல்ல முயன்ற இருவர் கைது!
காரைநகர் கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
மற்றைய செய்திகள்
கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வியாழன், 3 ஜூலை, 2014
காற்றில் பறந்த வீடு: உயிர் பிழைத்த அதிசயம் (காணொளி)
அமெரிக்காவில் வீசிய புயல் காற்றினால் வீடு ஒன்று பறந்து சென்றதில் அதிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
கடந்த 16ம் திகதி அமெரிக்காவின் நெப்ரெஸ்கா நகரில் வீசிய பலத்த புயல் காற்றினால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுமார் 350 பேரின் வீடுகளை அடித்து சென்ற இந்த புயல் காற்றில், ஒரே ஒரு வீடு மட்டும் காற்றில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் 180 டிகிரி கோணத்தில் அமர்ந்துள்ளது.
இந்த புயல் காற்று வீட்டை அடித்து செல்லும் காட்சி காணொளி ஒன்றில் படமாகியுள்ளது. இங்கிருந்த சாவேஜ் (25) என்ற நபர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் போர்வையுடன் இருந்துள்ளனர்.
காற்றில் போர்வை பறந்து சென்றாலும் இவர்கள் படுகாயம் ஒன்றும் அடையாமல் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.
இதுகுறித்து புயலின் போது வீட்டிலில்லாத சாவேஜின் மனைவி ஜூலி கூறுகையில், இவர்கள் மூவரும் எப்படி தான் தப்பித்தார்களோ தெரியவில்லை என தளதளர்த்த குரலில் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
ஒபாமா படு மோசம்: மக்களின் நறுக் பதில்கள்
மற்றைய செய்திகள்
மற்றைய செய்திகள்
புதன், 2 ஜூலை, 2014
கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடும் கரடி
மாமிச உண்ணிகளான கரடிகள் பொதுவாக கொலைவெறியுடனேயே காடுகளில் அலையும். அதே போல மனிதனுக்கும் எதிரானவையாகவே பார்க்கப்படுகின்றன.
இவ்வாறு இருந்தும் இராட்சத கரடி ஒன்று நட்புடன் குத்துச்சண்டை பயிற்சியாளருடன் கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடுவது இணையத்தில் மிகவும் பிரபல்யமாகியுள்ளது.
மற்றைய செய்திகள்
இவ்வாறு இருந்தும் இராட்சத கரடி ஒன்று நட்புடன் குத்துச்சண்டை பயிற்சியாளருடன் கட்டிப்புரண்டு குத்துச்சண்டை போடுவது இணையத்தில் மிகவும் பிரபல்யமாகியுள்ளது.
மற்றைய செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)