siruppiddy

திங்கள், 29 டிசம்பர், 2014

இதுதான் வெளிநாடு எல்லோரும் பார்க்க வேண்டிய காணொளி இது??

நிச்சயம் எல்லோரும் பார்க்கவும இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை கட்டாயம் பாருங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம்அல்ல இந்தக்காணொளிப்பதிவு
நிச்சயம் கண் கலங்குவீர்கள்!
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 22 டிசம்பர், 2014

ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர்புகை பிரயோகம்

 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்துள்ளதாக 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 15 டிசம்பர், 2014

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில் ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்று காணாமல்போனவர் இன்று காலை சடலமாக குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல்போன கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனின் சடலம் காணாமல்போன பகுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எட்டு வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ். நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது. 

நுணாவில் மத்தியை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் (வயது 8) எனும் சிறுவனே இன்று இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பெற்றோர்கள் வீட்டில் சிறுவனை தனியே விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து வீடு வந்த போது சிறுவனை வீட்டில் காணவில்லை. 

பல இடங்களில் நேற்று தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை இந்நிலையில் இன்று காலை கிணற்றடிக்கு பெற்றோர் சென்று இருந்த போது சிறுவன் சடலமாக கிணற்றுக்குள் மிதந்ததை பார்த்துள்ளனர். 

அதனை அடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு - ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். 

இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர். 

எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். 

கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய ஐந்து பேரையும் பொலிசார் விசாரணை செய்துவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினரும் காணாமல் போயுள்ள இந்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 9 டிசம்பர், 2014

பிள்ளையாருக்கு அருகில் உருவெடுக்கும் விகாரை:

 
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு சிறிய விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 6 டிசம்பர், 2014

அரிசி இறக்குமதி: ஒப்பந்தம் கைச்சாத்து

பங்களாதேஷிலிருந்து 25,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமொன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில்  கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெ

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 டிசம்பர், 2014

மீட்ட தங்கம் 1960 பேரின் நகைகள் ஜனாதிபதியால் இன்று கையளிப்பு!

வடக்கிலிருந்து 4 ரயில்களில் உரிமையாளர்கள்!
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
 
இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிகையில்,
 
முதற் கட்டமாக அடையாளங் காணப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேரின் பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
 
இரண்டாவது கட்டமாக தற்பொழுது அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்கே இன்று கையளிக்கப்படவுள்ளன.
 
இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1187 முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேரும் இவற்றில் அடங்குவர்.
 
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சியிலிருந்து 2 புகையிரதம் வவுனியாவிலிருந்து 2 புகையிரதம் என்ற அடிப்படையில் நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்களில் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
 
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான நேரத்தில் பொல்காவலை பிரதேசத்தை வந்தடையும் இந்த புகையிரதம் அங்கு சிறிது நேரம் தரித்து நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் பகல் போசனம் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்படும் இந்த புகையிரதங்கள் காலை 11.15 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை கொழும்பு, கொம்பனித் தெரு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது. அதன் பின்னர் இவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை