siruppiddy

சனி, 10 டிசம்பர், 2016

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பான ஓர் முக்கிய அறிவிப்பு?

சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வயது மற்றும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டள்ளது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

சில சாரதி பயிற்சி நிலையங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான குறைந்த வயது 25 ஆகவும் அதற்கான கட்டணம் 25,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 24 நவம்பர், 2016

பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்திலுள்ள “பிக் சிற்றி” எனும் வீட்டுத்திட்டத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு 
தப்பிச்சென்றுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி:
கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது.
தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்­நடை உதவி டாக்டர் முருகன், கால்­நடை ஆய்­வாளர் மணி­கண்டன், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் முத்­து­நா­யகம் ஆகியோர் கொண்ட மருத்­துவ குழு செம்­மறி ஆட்­டிற்கு சிகிச்சை அளித்­ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்­க­ளுடன் கூடி குட்­டியை  வெ­ளியே எடுத்­தனர்.  தாய் ஆடு நல­முடன் உள்ள போதிலும், அதி­சய ஆட்­டுக்­குட்டி இறந்­தது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 18 நவம்பர், 2016

இனி இலங்கையில் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 12, அல் ஹுஸைன் கல்லூரியில்,17.11.2016 நேற்றைய தினம் இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையின் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
 முன்னெடுத்துள்ளது.
எமது புதிய கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்கமைய, தற்போது நிலவும் கல்வித் திட்டத்திலும் பார்க்க உயர் நவீனத்துவம் கொண்ட கல்வித் திட்டமொன்று, எமது மாணவர் சமுதாயத்துக்குப் 
பெற்றுக்கொடுக்கப்படும்.
எமக்கு கிடைத்ததை விட சிறந்த எதிர்காலத்தை, எமது இளைஞர் சமுதாயத்துக்குப் பெற்றுக்கொடுப்பதே, எமது பிரதான இலக்காகும்.
தற்காலத்தில், அலைபேசிகள், ஐபாட் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், பயன்பாட்டில் உள்ள நிலையில், தொழில்நுட்பத்துடன் சேர்த்து, எமது பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம், புதிய வேலைத்திட்டங்களை 
ஆரம்பிக்கவுள்ளோம்.
நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட
 வேண்டும்.
நம் நாட்டுக் கல்வித் திட்ட அபிவிருத்திக்காக, பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வோம் என்று குறிப்பிட்ட பிரதமர்,
குறைந்த சம்பளம் வழங்கும் பொருளாதாரத்திலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அறிவு அதிகரிக்கும் அளவுக்கு, சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும். கல்வித் துறையின் மாற்றம், அதனை இலக்காகக் கொண்டதாகவே அமைந்துள்ளது என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 நவம்பர், 2016

இராட்சத முள்ளங்கி ஒன்று புதிதாக காய்த்துள்ளது!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.
விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 27 அக்டோபர், 2016

யாழ் வலிகாம விவசாயிகள் கோவா செய்கையில் ஆர்வம் !

யாழ்.வலிகாமம் பகுதியில் மரக்கறிப் பயிர்ச்செய்கையான பெரும் போக கோவா செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி
 வருகின்றனர்.
புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, கட்டுவன், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலப் பகுதியில் கோவா செய்கை பயிரிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோவா செய்கை இரண்டரை மாத காலத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.
கோவா செய்கையின் அதிகரித்த விளைச்சல் காரணமாகக் கடந்த வருடம் தம்மால் அதிக இலாபம் பெற முடிந்ததாக வலிகாமம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.16

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்   செல்வப்புதல்வி அபிதா தனது 
பதின் நான்காவது   பிறந்த நாளை. 24.10.16.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
உன் அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நீங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா ? அதில் மறைந்திருக்கும் ரகசியம்!

பொதுவாக நம்மில் அதிகமானோர் பயன்படுத்தி வருவது ஹெட்செட். நாம் அனைவரும் அதன் மூலம் பாடல்கள் கேட்கிறோம், படங்கள் பார்க்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் பெரிதாக சிந்திப்பதில்லை.
பயணத்தின் போதோ, நடந்து செல்லும் போது, அது ஏன் தூங்குவதற்கு முன்னர் கூட பலர் ஹெட்செட்டில் பாடல் கேட்டு வரும் பழக்கம் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் கேட்டால், ஹெட்செட் இல்லாமல் பாடல்களோ அல்லது படங்களோ பார்த்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறிவிடும், அதன் காரணமாகவே ஹெட்செட் பயன்படுத்தவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
ஹெட்செட்டில் பாடல்கள் கேட்பது என்பது ஒரு பொழுது போக்கு என்பது மாறி, தற்போது அது ஒரு Style ஆக மாறியுள்ளது. ஆனால் அதில் இருக்கு பாதிப்புகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை, அது தெரிந்தால் ஹெட்செட் உபயோகிப்பதை சற்று யோசிப்பீர்கள்.
* தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்திவந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காது கேட்காத நிலை கூட ஏற்படும்.
* பொதுவாக 80-85 வரையிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும்போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.எனவே ஹெட்செட்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது.
* மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
* அடுத்தது ஹெட்செட்களை சுத்தமாக வைத்துகொள்வது. நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம். அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம்.
* அதேபோல் அடுத்தவர்களின் ஹெட்செட்களை நாமும் பயன்படுத்த கூடாது, நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு தரவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவருக்கும் தொற்றிக்கொள்ளும்.
* ஹெட்செட்களில் இருந்து உற்பத்தியாகும்
 மின்காந்த அலைகள் தமது மூளையை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஹெட்செட்களை பயன்படுத்திகொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
* எனவே வாகனம் ஓட்டும் போதோ சாலையில் நடந்துசெல்லும் போதோ ஹெட்செட்டை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடவேண்டும்.
* முடிந்தளவு ஹெட்செட்டில் பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு இயற்கையின் ஓசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு இனிமை 
ஏற்படக்கூடும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 14 அக்டோபர், 2016

எதிர் வரும் மார்ச் மாதம் முதல் எண்ணெய் விற்பனை க்கு புதிய நடைமுறை!

போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது பொதியிடப்பட்ட அனைத்து எண்ணெய் வகைகளினதும் சில்லறை அல்லது மொத்த விற்ப னையின்போது சகல உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அவற்றின் தகவல்களை தெளிவாக அச்சிட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
பொருள் இலக்கம், உற்பத்தி திகதி, காலாவதி திகதி, அளவு, அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தியாளர் பெயர் மற்றும் முகவரி, இறக்குமதி செய்யப்பட்டதாயின் இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவரி, மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு என்பன அச்சி டப்பட 
 வேண்டும்.
அத்துடன் உணவுக்காக பயன்படுத்தப்படும் எண்ணெய் வகை மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் பொதியிடப்பட்டி ருப்பின், உற்பத்தி திகதி, மற்றும் மீள் பொதியிடப்பட்ட திகதி என்பன குறிப்பிடப்பட
 வேண்டும்.
கலப்பு எண்ணெய் வகையாயின், அதில் அடங்கியுள்ள எண்ணெய் வகை மற்றும் அதன் விகிதம் தொடர்பான தகவல்களுடன், கலப்பு செய்யப்பட்ட எண்ணெய் என்ற அறிவித்தல் 
அச்சிடப்பட வேண்டும்.
நடைமுறையிலுள்ள விதிமுறைகளுக்கு அமைவாக, “உணவுக்காக பயன்படுத்தப்படும் உறையிடப்பட்ட அல்லது பொதி செய்யப்ப ட்ட எண்ணெய்” என்ற பதம் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்ப ட்டுள்ளது.
இந்த கட்டளை, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் என்றும் அதிகார சபை
 சுட்டிக்காட்டியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 10 அக்டோபர், 2016

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 22500 பேரை நியமிக்க நடவடிக்கை!!.

நாடு தழுவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளின் கல்வித் தரத்தினை பேணுவதற்கு போதுமான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளில் இருக்க வேண்டும்.
எனினும் மொத்தமாக நாடு தழுவிய ரீதியில் அமைந்துள்ள பாடசாலைகளில் 22,500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.
விசேடமாக கிராமிய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிளம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்காக போதுமான ஆசிரியர்கள் மற்றும் வளங்கள் இல்லை.
இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அரச பட்டதாரிகள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர்களை ஆசிரியர் தொழிலுக்கு
 சேர்த்துக் கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதிக்கான தகைமை கொண்ட உயர் தரம் சித்தி பெற்ற இளைஞர் – யுவதிகளை
 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற விஞ்ஞான மற்றும் கலை பட்டமொன்றை பூர்த்தி செய்தவுடன் ஆசிரியர் 
சேவைக்கு 
இணைத்துக் கொள்வதற்கும், அதற்காக அரச வங்கி ஒன்றிலிருந்து 275,000 ரூபா கடன் தொகையொன்றை அவ்விளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கும், பட்டப்படிப்புக்காக இணைத்துக் கொள்வதற்கு தகைமை பெற்ற இளைஞர் யுவதிகள் பட்டப்பிடிப்பினை நிறைவு பெற்ற பின் 10 வருட காலத்துக்காக தம்மால் தெரிவு செய்யப்படும் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் குறைப்பாடுகளை கொண்ட பாடசாலைகளுக்கு ஆசிரியராக பணிபுரிவதற்கு முடியுமான வகையில் வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பிரதேசத்தில் ஆசிரியராக 10 வருடங்கள் பணிபுரிந்தால் பட்டப்படிப்புக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் கடன் தொகை மீண்டும் அறவிடப்பட மாட்டாது. அதனடிப்படையில் அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக முதற் கட்டமாக இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்தில் சித்திபெற்ற இளைஞர் யுவதிகள் 5000 பேரை விஞ்ஞானம் மற்றும் கணித ஆசிரியர்களாக இணைத்துக்
 கொள்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சர் எனும் ரீதியில் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
 வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரச பாடசாலைகளில் தற்போது காணப்படும் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக வேண்டி பட்டதாரிகளை விரைவில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு அதிகாரத்தினை வழங்குவதற்கும்
 தீர்மானிக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அதிசக்தி வாய்ந்த X கதிர் விண்வெளியில் உருவாகின்றது !

X கதிர்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும், மருத்துவ செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவற்றிலிருந்து வெளியாகும் சக்தியானது உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பலத்த பாதுகாப்புக்களுடனேயே மருத்துவ சிகிச்சைகள் அல்லது பரிசோதனைகள் 
மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் இவற்றினை விடவும் அதிக சக்தி வாய்ந்த X கதிர்கள் அண்டவெளியில் உற்பத்தி செய்யப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை நாசா விண்வெளி ஆய்வு மையம் 
உறுதிப்படுத்தியுள்ளது.
2012ம் ஆண்டு நாசா நிறுவனம் மேற்கொண்ட DXL எனும் ராக்கெட்டினை விண்ணிற்று அனுப்பும் முயற்சியின் போது பால்வெளியில் குறைந்தளவு சக்தி உடைய X கதிர்கள் உருவாக்கப்படுகின்றமை 
கண்டறியப்பட்டது.
எனினும் இவ்வகை கதிர்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்பதனை இதுவரை கண்டுபிடிக்காத நிலையில் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் சய்திகள் >>>



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.16

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு திருமதி சந்திரன் (குட்டி)தம்பதிகளின் இருபத்தி ஒன்பதாவது  திருமணநாள் இன்று.14.09.16. இவர்களை அன்பு ,அம்மா அன்பு பிள்ளைகள் ,அண்ணா அண்ணி பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள்

சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து நவக்கிரி.கொம்    நவற்கிரி இணையங்களும்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும்  தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென   வாழ்த்துகின்றன,
 திருமணநாள்  வாழ்த்துக்கவிதை
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம் 
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம் 
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும் 
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும் 
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய 
வாழ்த்துகிறோம்!
வாழ்கவளமுடன் 
 வாழ்த்து நிகழ்வு நிழல்படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






/div>



புதன், 24 ஆகஸ்ட், 2016

சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - நூல் வெளியீடு ¨!

யாழ் மாநகராட்சியின் மன்ற சைவ விவகாரக் குழுவால் நல்லைக் குமரன் - 24 வெளியீட்டு விழா 24.08.2012.இன்று யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவத்தை 
முன்னிட்டு
 வருடந்தோறும் "நல்லைக் குமரன்" நூல் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகர சபை ஆணையாளரும் சைவ சமய விவகாரக் குழுவின் தலைவருமான பொ.வாகீசன் தலைமையில்
 இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,சிறப்பு விருந்தினராக துனைத்தூதுவர் ஆ.நடராஐன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
மேலும் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் வீனா கான குரு பீட பீடாதிபதியுமான வாசுதேவக் குருக்கள்,சின்மயா மிசன் ஆச்சாரியர் ஜாக்ரத சைத்தன்ய சுவாமிகள், துர்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஆகி்யோர் ஆசியுரை வழங்கினார்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 3 ஆகஸ்ட், 2016

இலங்கையர்கள்ஐரோப்பியரை விட அதிகமாக மது அருந்துகின்றனர்

 ஐரோப்பியரை விட  அதிகமாக மது அருந்தும் இலங்கையர்கள்
ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் மதுபான அளவை விட இலங்கை மக்கள் ஐந்து மடங்கு மதுபானத்தை அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஒருவர் தினமும் 3.3 லீற்றர் மதுபானத்தை அருந்துகிறார். ஐரோப்பாவில் ஒருவர் தினமும் 0.5 லீற்றர் மதுபானத்தையே அருந்துகிறார்.

இலங்கையில் மக்கள் தொகையில் 20 சத வீதமானவர்களே மதுபானம் அருந்துகின்றனர். ஐரோப்பாவில் 95 வீதமான மக்கள் மதுபானத்தை அருந்துகின்றனர்.

இலங்கையில் 37.1 வீதமான ஆண்களும் 2.4 வீதமான பெண்களும் 40 ஆயிரம் இளையோரும் மதுபானத்தை அருந்துகின்றனர்.

பெண்கள் மதுபானத்தை அருந்துவது 1.2 வீதத்தில் இருந்து 2.4 வீதமாக உயர்ந்துள்ளது எனவும் பாலித அபேகோன் 
குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

குழந்தை தாய்ப்பால்அருந்தும்போது மூச்சுத்திணறி மரணம்

தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுச்
 சென்றுள்ளார்.
எனினும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மரண விசாரணைகளை, திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 25 ஜூலை, 2016

இதுவரை அனுமதி அட்டை கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்!

தரம் 5 புலமைபரிசில்  பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி தரம் 5 புலமைபரிசில்  பரீட்சை நடைபெறவுள்ளன.
இதுவரை அனுமதி அட்டை கிடைக்காத மாணவர்கள், இது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறித்த அனுமதி அட்டைகள், இம்மாதம் 18ஆம் திகதி பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என.ஜே.புஷ்பக்குமார தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 29ஆம் திகதிக்குள் பரீட்சை சுட்டெண் குறிப்பிடப்பட்ட அனுமதி அட்டைகள் வந்துசேராத பாடசாலை அதிபர்கள் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும் .
இது தொடர்பில் மேலதிக விவரங்கள் தேவைப்படுவோர் 011 2784208, 0112784537, 0113140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது 1911 எனும் இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். அத்துடன், 0112784422 எனும் பெஃக்ஸ் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என பரீட்சைகள் திணைக்களம் 
குறிப்பிட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 7 ஜூலை, 2016

மூதூர் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் இன்று வியாழக்கிழமை (7) காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் 03 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் மேற்படி பகுதியைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் 03 பேரைக் கொண்ட குழுவினரின் வாள்வெட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் பலியான நபர், அவரது மைத்துனரைக் கட்டுத்துவக்கினால் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 03 மாதங்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையிலேயே இவர் மீது வாள்வெட்டு இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் வாள்வெட்டில் பலியானவரின் மைத்துனர்கள் 03 பேரைக் கைதுசெய்ததாக பொலிஸார்
 கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 23 ஜூன், 2016

வர்த்தக நிலையம். தீ பற்றி எரிந்தது அக்கராயனில் சம்பவம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் அண்ணா சிலைச் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டு வர்த்தக நிலையம் முற்றாக நாசமாகியது.. இந்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தக நிலையம் தீப்பற்றிக்கொண்டதை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ பற்றிக்கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கராயன்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால், வர்த்தக நிலையத்தில் இருந்த 30 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், பெருந்தொகைப் பணமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 ஜூன், 2016

யாழ் கோண்டாவிலில் :தலா 2 மில்லியனில் 15 வீடுகள்!கட்டப்பட்டுள்ளது!

கோண்டாவிலில் திரு.இராசையா குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.
கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம்இகுமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி ஆச்சிரமத்தினில் தங்கியிருந்த இளம்பெண்களிற்கு அவர்கள் தமது வாழ்வை தொடர ஏதுவாக இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வீடுகள் தலா 2மில்லியன் மதிப்பீடு கொண்டவையாகும்.நிகழ்வினில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கொடையாளரை கௌரவிக்கும் நிகழ்வை ஊர் மக்கள் 
முன்னெடுக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




திங்கள், 13 ஜூன், 2016

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி ( 13.06.16 )

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) தனது  பிறந்தநாளை இன்று .13.06..2016. கொண்டாடுகி​றார். இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சகலவளம்மும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றது 
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை