siruppiddy

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கண்ணை மறைக்கிறதா... காவி பாசம்?!


குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரைச் சேர்ந்தவர் சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் இருக்கின்றன. அதிரடி சாமியாரான இவர் மீது ஒரு சில வழக்குகளும் இருக்கின்றன.
இந்நிலையில், 'அஸ்ரம் பாபு என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என்று, அவருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்த உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பதினாறு வயது இளம்பெண், டெல்லி போலீசில் சமீபத்தில் புகார் செய்தார்.
அந்த ஆசிரமம் இருக்கும் இடம் ராஜஸ்தான் மாநில எல்லைக்குள் வருவதால், அந்த மாநிலத்திலிருக்கும் ஜோத்பூர் போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆகஸ்ட் 30 அன்று ஆஜராகும்படி, அந்த சாமியாருக்கு ஜோத்பூர் போலீஸ் சம்மன் அளித்திருக்கிறது.
வழக்கமாக பாலியல் பலாத்கார புகார்கள் வந்தால், குறைந்தபட்சம் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வது போலவாவது பாவ்லா காட்டுவது போலீஸின் வழக்கம். பெரும்பாலும் குற்றவாளிகளிடம் இருந்து பணத்தைக் கறந்து கொண்டு தப்பிக்க வைப்பதும் நடக்கும். அதிலும் பாதிக்கப்பட்ட பெண் அப்பாவி, ஏழை என்றால், கேட்கவே வேண்டாம்.
சமயங்களில் பாலியல் பலாத்கார புகார்களையொட்டி பொதுமக்கள் கிளர்ந்து எழுந்து போராட ஆரம்பித்தால் (டெல்லி மற்றும் மும்பை சம்பவங்கள்), வீறு கொண்டு எழும்போலீஸ், குற்றம்சாட்டப்பட்டவர்களை 24 மணி நேரத்தில் பிடித்து உள்ளே போட்டு வெளுத்து வாங்க ஆரம்பித்துவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் ஒரு சாமியார் என்பதால், ராஜஸ்தான் மாநில போலீஸ் கிட்டத்தட்ட வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பது போல சம்மன் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், இது பொறுக்கவில்லை... பி.ஜே.பி. கட்சியினருக்கு... 'இது ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் சதிவேலை. வேண்டுமென்றே அஸ்ரம் பாபு மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. திட்டமிட்ட சதி' என்றெல்லாம் கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டனர்.
இதே பி.ஜே.பி.தான்... டெல்லி மற்றும் மும்பை கற்பழிப்பு வழக்குகளின்போது... வீதிக்கு வந்து கடுமையாக போராட்டங்களை நடத்தியது. அடிக்கடி டி.வி.யில் தோன்றி ஆவேசமாக பேட்டிகளையும் அளித்தனர் அந்தக் கட்சியினர். இப்போது ஒரு சாமியாருக்கு பிரச்னை என்றதும்... வெளிப்படையாகவே அவரை ஆதரித்து பேச ஆரம்பித்துவிட்டனர்... அந்த 16 வயது இளம்பெண்ணின் நிலையை நினைத்துப் பார்க்காமல்.
போலீஸ் விசாரித்து உண்மையைக் கொண்டு வருவதுதானே நம் நாட்டின் நடைமுறை. அதை எதற்காக இந்த பி.ஜே.பி. எதிர்க்க வேண்டும். தமிழகத்தில் கூடத்தான் பிரேமானந்தா போன்ற சாமியார்கள் மீது வழக்குப் பதிவாகின. தண்டிக்கவும் பட்டார்கள். ஏன்...? தற்போதைய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மீது கொலை வழக்கே நடந்து கொண்டிருக்கிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிவிடக்கூடாது என்பதுதான் முக்கியமாக இருக்க வேண்டுமே தவிர, அவன் சாதராண மனிதன்... அவர் சாமியார் என்கிற வேறுபாடுகள் எதற்காக?
நாளைக்கு இந்த நாட்டை ஆளப்போகிறோம்... நாங்கள்தான் சுத்தம் சுயம்பிரகாச தொண்டர்கள் என்று பேசும் பி.ஜே.பி.யினர், இந்த விஷயத்தில் சட்ட நடவடிக்கைகளுக்குத்தானே துணை நிற்க வேண்டும். சொல்லப்போனால், 'வழக்கை பதிவு செய்த ராஜஸ்தான் மாநில (காங்கிரஸ்) போலீஸ், உடனடியாக அஸ்ரம் பாபுவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவேண்டும்' என்றல்லவா இந்த பி.ஜே.பி. கோரிக்கை வைத்து போராடியிருக்க வேண்டும்.
பி.ஜே.பி.யினர், காவி பாசத்தோடு, அந்த அஸ்ரம் பாபுவுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு நிற்பது... அந்த 'பாரத மாதா'வுகே அடுக்காது
 

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

நீச்சலடித்து கொண்டிருந்த போது நடந்த விபரீதம்


கனடாவில் சிறுவர்களுடன் சேர்ந்து நீச்சலடித்து கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
Don Mills Road and Lawrence Avenue East பகுதியில் உள்ள Dallimore Circle அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் 3 வயது சிறுவன் நீச்சலடித்து கொண்டிருந்தான்.
அப்போது மேற்பார்வையாளர்கள் கவனிக்காத நேரத்தில் குறித்த சிறுவன் நீருக்குள் மூழ்கியுள்ளான்.
இதனையடுத்து சுமார் 3 நிமிடங்கள் கழித்த சிறுவனை கண்டுபிடித்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தது பெற்றோர் உட்பட அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி திருடிய இராணுவ வீரருக்கு .,


அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரித்ததில் செல்வநாயகபுரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக குறித்த வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
 

""ஈமயிலைக்கண்டுபிடித்தவர்எம் தமிழர்!!

அவர்வேருயாரும்இல்லை இவர்ரெதான்இந்த தமிழனுக்குஎமது அன்பந்தநல்வாழ்த்துக்கள்உரித்தகுகநன்றி,,,,,

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

சுவிஸ் Olten மாநகரில்எதிர்வரும் 24ம் ஐரோப்பிய நடனப் போட்டி-

 
ஐரோப்பிய இளம் நடனக் கலைஞர்களுக்கான நடைபெறும் ஐரோப்பிய நடனப் போட்டி 2013 நிகழ்ச்சி எதிர்வரும் 24ம் திகதி சுவிஸ் Olten மாநகரில் நடைபெறவுள்ளது. வெற்றிகரமாக கடந்த ஆண்டு நிறைவேறிய இவ் நிழக்வு இவ்வருடம் லங்காசிறியின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் அரங்கேற இருக்கின்றது. இதில் குறிப்பாக Solo Dance, Karaoke Music, Fashion Show, Comedy Show and லங்காசிறியின் குண்டக்க மண்டக்க நிகழ்ச்சியும் நிகழ்வை அலங்கரிக்கும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் ரிவி புகழ் பாவனா அத்தோடு நடுவராக நடிகர் பரத் மற்றும் மேலும் சிலர் பங்கு பெற்று நிகழ்ச்சியை சிறப்பிற்கின்றனர். இவ் சிகழ்ச்சிகளுக்கான Ticket க்களை பெற்றுக்கொள்ள 0041 788809002 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்

புதன், 21 ஆகஸ்ட், 2013

சவுதியில் தொடரும் மரண தண்டனைகள்


சவுதி அரேபியாவில் இரண்டு குற்றவாளிகளுக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இப்ராஹிம் அல் குவன்பார் மற்றும் அஹமத் அல் முசலாம் என்ற இருவர் தொழிலாளர் முகாம் ஒன்றினைத் தாக்கியதுடன், அங்கிருந்த குடியிருப்புகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
இதில் முகமது அல் சுஜா என்ற தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
தனையடுத்து கிழக்குப் பிராந்தியத்தின் குவாடிப் மாவட்டத்தில் நேற்று இவர்கள் இருவரும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தாண்டு மட்டும் மரணதண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
இதேபோன்று ஈராக்கில் ஒரேநாளில் 2 பெண்கள் உட்பட 17 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு, உலகம் முழுவதிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

பாலஸ்தீனர்! பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்த,,

 
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவர் ஹேக் செய்துள்ளார்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் நிபுணர் கலீல் ஷ்ரியாதே. அவர் பேஸ்புக்கின் பாதுகாப்பு குழுவை தொடர்பு கொண்டு புகார் கூறினார். அதாவது பேஸ்புக்கில் யாருடைய கணக்கின் பக்கத்திலும்(wall) யார் வேண்டுமானாலும் எழுதும் வகையில் உள்ளது. இது பாதுகாப்பானது இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை பேஸ்புக் குழு கண்டுகொள்ளவில்லை. வழக்கமாக பேஸ்புக் பாதுகாப்பில் ஏதாவது பிரச்சனை(bug) இருப்பதை கண்டுபிடித்து தெரிவித்தால் பரிசு அளிப்பார்கள். ஆனால் அவர்கள் கலீலிடம் இப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

இதனால் கடுப்பான கலீல் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க்கின் பக்கதை ஹேக் செய்து அதில் புகாரை தெரிவித்துள்ளார்.ஜக்கர்பர்கின் பக்கத்தில்(wall) கலீல் கூறியிருப்பதாவது, என் பெயர் கலீல் ஷ்ரியாதே. நான் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸில் பி.ஏ. முடித்துள்ளேன். உங்களின்(www.facebook.com) இணையதளத்தில் ஒரு பக்கை(bug) கண்டுபிடித்துள்ளேன். அது குறித்து உங்களிடம் புகார் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த பக்(bug) மூலம் ஒரு பேஸ்புக் யூசர் மற்றொரு யூசரின் பக்கத்தில்(wall) எழுத முடிகிறது. நான் சாரா. குடின் என்பவரின் பக்கத்தில் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் வாழும் கலீலுக்கு ஜக்கர்பர்க்குடன் ஹார்வர்டில் படித்த சாராவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

இளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் புதிய தகவல்


 
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசி அமரர் டயனாவின் மரணம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவல்களை ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி பாரிஸில் இளவரசி டயனா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த கார் விபத்தில் டயனாவுடன் பயணம் செய்த டோடி அல் பயாட் என்பவரும் உயிரிழந்திருந்தார். இந்த புதிய தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகனத்தைச செலுத்திய சாரதியின் கவனயீனத்தினால் டயனாவும் அல் பயாட்டும் கொல்லப்பட்டதாக 2008ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
லண்டன் நீதிமன்றில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த மரணங்களுடன் இராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சில ஞாயிறு பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தகவல்கள் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என பிரித்தானிய அரச மாளிகை அறிவித்துள்ளது

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

பரீட்சைக்கு கண்விழித்து கற்பதற்கென தாயை ஏமாற்றி!



க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி வருகின்ற பாடசாலை மாணவன் ஒருவர் இரவில் கண் விழித்துக் கற்பதற்காக குளிர்பானம் என தாயரை ஏமாற்றி பணம் வாங்கி பியர் வாங்கி குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் சுழிபுரம் பகுதியிலுள்ள பாடசாலை மாணவன் ஒருவரே ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இரவில் கண் விழித்து கற்க வேண்டும் என தாயாரிடம் மாணவன் குளிர் பானம் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
இதனை கேட்ட தாயார் தினமும் பணம் கொடுத்துள்ளார். இதனைக் கொண்டு மாணவன் தினமும் ரின்னில் அடைக்கப்பட்ட பியரை வாங்கி குடித்துள்ளார்.
நிறைய ரின்கள் வீட்டில் சேர்ந்து விட அவற்றை வியாபாரி ஒருவரிடம் விற்பனை செய்யக் கொண்டு சென்றபோது இவ்வளவு பியரை யார்? குடித்தது என வியாபாரி வினவியபோதே விபரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மகனின் இந்தச் செயலால் தாயார் அதிர்ச்சியடைந்தள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

ஒருவராத்தில் 5 65000 ரூபா பெறுமதியான காசோலை மோசடிகள்!


 யாழ்ப்பாணத்தில் கடந்த வாரத்தில் மட்டும் 5 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.காவல்துறை நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே காவல்துறை அதிகாரி எம். முகம்மது ஜிப்ரி தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கடந்த வாரத்தில் யாழ். நகரைச் சேர்ந்த ஒருவர் அதே இடத்தைச் சேர்ந்த இன்னொரு வர்த்தகருக்கு 3 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை ஒன்றினைக் கொடுத்துள்ளார். அக்காசோலை செல்லுபடியற்றதினால் காசோலையைப் பெற்ற குறித்த நபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப் பாட்டினைத் தொடர்ந்து காவல்துறை குறித்த சந்தேக நபர் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டபோது சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளார் இதனால் அவரைக் கைது செய்ய முடியவில்லை. இதுதொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு நபர் கொக்குவில் விதானை வீதியைச் சேர்ந்த நபரிடம் 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையைக் கொடுத்து மோசடி செய்தமை தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த சந்தேக நபர் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போது சந்தேக நபர் தலைமறைவாகியமையால் கைது செய்யமுடியவில்லை.
இது தொடர்பான விசாரணைகளைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இருவரையும் விரைவில் கைது செய்வோம் என்றார்

சனி, 17 ஆகஸ்ட், 2013

அறிமுகமாகின்றது Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி



புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசியானது வருகிற செப்டெம்பர் 2ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5.1 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Samsung Exynos 5 Octa Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சேமிப்பு நினவைகமாக 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றினையும் 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.
 

முதல் தடவையாக மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் போட்டி

 
 
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாக மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் கார் ஒட்டப் பந்தயங்கள் நடைபெறுவதற்க்கான ஏற்பாடுகளை செய்வதில் ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இது சம்பந்தமான ஊடகவியலாளாகள் மாநாடொன்ற யாழ்ப்பாணம் பொது நூலக மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நன்பகல் இடம் பெற்றது.
குறித்த போட்டி தொடர்பாக கார்ஸ்டன மோட்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் டிணேஸ் ஜெயவர்த்தனா  கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறவுள்ள மோட்டார் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சையிக்கிள் ஓட்டப் போட்டிகள் என்பன முதல் கட்டமாக நடைபெறுவதாகவும் இதில் கிடைக்கும் அனுபவங்கள் ஆதரவைப் பொறுத்து எதிர் காலத்தில் சர்வதேச மட்டத்திலான கார் பந்தயப் போட்டிகள் மற்றும் மோட்டார் சையிக்கிள் போட்டிகளையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த போட்டிகள் எதிர் வரும் 13 ம் 14 ம் 15 ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் தொவித்துள்ளார்.
குறித்த போட்டியில் புதியவர்களும் இணைந்து கொள்ள முடியும். இவ்வாறான போட்டிகளினால் பிராந்தியத்தில் பெர்ருளாதார மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

டிராக்டர் தடம்புரண்டதில் இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் டிராக்டர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து பி.ப 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிராக்டரை அதிவேகமாக வந்து சந்தியில் திருப்ப முற்படுகையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் படுகாயமடைந்த இருவரும் மதுபோதையில் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.

பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி!!!


 
தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது,
பேஸ்புக் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையானவர்கள் தனிமையில் இருப்பதாகவும்,
பேஸ்புக் பாவனையின் பின்னர் தமது சொந்த வாழ்க்கையில் இழந்த நேரங்களை நினைத்து கவலைப்படுவதாகவும் முடிவுகள் கிடைத்துள்ளது.
இதேவேளை நாள்தோறும் ஒரு பில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பேஸ்புக் தளத்தினை பயன்படுத்துவதாகவும் குறித்த பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அருள்மிகு ஸ்ரீ விநாயகர் புகழ் [காணொளி]

வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் தரும் ஸ்ரீ மாணிக்க பிள்ளை யாரின் மிகவும் அட்புதப் பாடல் உங்களுக்காக,,,
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை