இந்தத் தகவல்களை ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி பாரிஸில் இளவரசி டயனா பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த கார் விபத்தில் டயனாவுடன் பயணம் செய்த டோடி அல் பயாட் என்பவரும் உயிரிழந்திருந்தார். இந்த புதிய தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்கொட்லன்ட்யார்ட் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
வாகனத்தைச செலுத்திய சாரதியின் கவனயீனத்தினால் டயனாவும் அல் பயாட்டும் கொல்லப்பட்டதாக 2008ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
லண்டன் நீதிமன்றில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இந்த மரணங்களுடன் இராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதாக சில ஞாயிறு பத்திரிகைகள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த தகவல்கள் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என பிரித்தானிய அரச மாளிகை அறிவித்துள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக