கனடாவில் சிறுவர்களுடன் சேர்ந்து நீச்சலடித்து கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான். Don Mills Road and Lawrence Avenue East பகுதியில் உள்ள Dallimore Circle அடுக்குமாடி கட்டிடத்தில் அமைந்துள்ள நீச்சல்குளத்தில் 3 வயது சிறுவன் நீச்சலடித்து கொண்டிருந்தான். அப்போது மேற்பார்வையாளர்கள் கவனிக்காத நேரத்தில் குறித்த சிறுவன் நீருக்குள் மூழ்கியுள்ளான். இதனையடுத்து சுமார் 3 நிமிடங்கள் கழித்த சிறுவனை கண்டுபிடித்தவர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தது பெற்றோர் உட்பட அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக