யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் டிராக்டர் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து பி.ப 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிராக்டரை அதிவேகமாக வந்து சந்தியில் திருப்ப முற்படுகையிலேயே வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாகவும் படுகாயமடைந்த இருவரும் மதுபோதையில் காணப்பட்டதாகவும் சம்பவ இடத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக