siruppiddy

திங்கள், 29 டிசம்பர், 2014

இதுதான் வெளிநாடு எல்லோரும் பார்க்க வேண்டிய காணொளி இது??

நிச்சயம் எல்லோரும் பார்க்கவும இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை கட்டாயம் பாருங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம்அல்ல இந்தக்காணொளிப்பதிவு
நிச்சயம் கண் கலங்குவீர்கள்!
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 22 டிசம்பர், 2014

ஆணைக்குழுவிற்கு முன் கண்ணீர்புகை பிரயோகம்

 
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் ஒருவகை பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்த குழுவினர் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்துள்ளதாக 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 15 டிசம்பர், 2014

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில் ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.

கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு – கிரான்குளம் கடலில் நீராடச் சென்று காணாமல்போனவர் இன்று காலை சடலமாக குறித்த பகுதியிலேயே மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர்.
எனினும் ஒருவர் கடலில் காணாமல் போன நிலையில் நேற்று முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் காணாமல்போன கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனின் சடலம் காணாமல்போன பகுதியில் இருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் விசாரணையினை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எட்டு வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ். நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது. 

நுணாவில் மத்தியை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் (வயது 8) எனும் சிறுவனே இன்று இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பெற்றோர்கள் வீட்டில் சிறுவனை தனியே விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து வீடு வந்த போது சிறுவனை வீட்டில் காணவில்லை. 

பல இடங்களில் நேற்று தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை இந்நிலையில் இன்று காலை கிணற்றடிக்கு பெற்றோர் சென்று இருந்த போது சிறுவன் சடலமாக கிணற்றுக்குள் மிதந்ததை பார்த்துள்ளனர். 

அதனை அடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


நீரில் மூழ்கிய ஏழு இளைஞர்கள் மீட்பு - ஒருவரைக் காணவில்லை

மட்டக்களப்பு - கிரான்குளம் கடலில் நீராடச் சென்ற எட்டு இளைஞர்களில் ஒரு இளைஞரை காணவில்லை என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

இன்று (14) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள் கிரான்குளம் தர்மபுரக் கடலில் நீராடச் சென்றுள்ளனர். 

இதன்போது, கடலில் மூழ்கிய அவர்களில், ஏழு பேரை மீனவர்களும் பொதுமக்களும் மீட்டெடுத்துள்ளனர். 

எனினும் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். 

கந்தசாமி ஜெயரூபன்(19) எனும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகள் இடம் பெற்றுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 

மீட்டகப்பட்ட ஏழு இளைஞர்களில் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய ஐந்து பேரையும் பொலிசார் விசாரணை செய்துவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையினரும் காணாமல் போயுள்ள இந்த இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


செவ்வாய், 9 டிசம்பர், 2014

பிள்ளையாருக்கு அருகில் உருவெடுக்கும் விகாரை:

 
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை தற்போது விகாரையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு சிறிய விகாரை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்தர் சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 6 டிசம்பர், 2014

அரிசி இறக்குமதி: ஒப்பந்தம் கைச்சாத்து

பங்களாதேஷிலிருந்து 25,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தமொன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கிடையில்  கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெ

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 4 டிசம்பர், 2014

மீட்ட தங்கம் 1960 பேரின் நகைகள் ஜனாதிபதியால் இன்று கையளிப்பு!

வடக்கிலிருந்து 4 ரயில்களில் உரிமையாளர்கள்!
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்குச் சொந்தமான தங்க ஆபரணங்களே அலரி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சி மற்றும் வவுனியாவிலிருந்து நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்கள் மூலம் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப்பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது.
 
இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிகையில்,
 
முதற் கட்டமாக அடையாளங் காணப்பட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த 25 பேரின் பெறுமதி வாய்ந்த நகைகளை கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி கிளிநொச்சியில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
 
இரண்டாவது கட்டமாக தற்பொழுது அடையாளம் காணப்பட்ட 1960 உரிமையாளர்களுக்கே இன்று கையளிக்கப்படவுள்ளன.
 
இவர்களில் மன்னாரைச் சேர்ந்த 223 பேரும், வவுனியா 319, கிளிநொச்சி 1187 முல்லைத்தீவு 186, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 பேரும் இவற்றில் அடங்குவர்.
 
வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 1960 பேரும் கிளிநொச்சியிலிருந்து 2 புகையிரதம் வவுனியாவிலிருந்து 2 புகையிரதம் என்ற அடிப்படையில் நான்கு விசேட யாழ். தேவி புகையிரதங்களில் இன்று கொழும்புக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
 
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரையிலான நேரத்தில் பொல்காவலை பிரதேசத்தை வந்தடையும் இந்த புகையிரதம் அங்கு சிறிது நேரம் தரித்து நிறுத்தப்பட்டு இராணுவத்தினரால் பகல் போசனம் வழங்கப்படவுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்படும் இந்த புகையிரதங்கள் காலை 11.15 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரை கொழும்பு, கொம்பனித் தெரு புகையிரத நிலையத்தை வந்தடையவுள்ளது. அதன் பின்னர் இவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என்றார்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 29 நவம்பர், 2014

காணாமல் போன மீனவர்கள் கரைசேர்ந்தனர்

பருத்தித்துறை கடலுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களும் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா கோவிலடியில் சனிக்கிழமை  காலை கரைசேர்ந்துள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழில் சங்கத்தினர் தெரிவித்தனர்.
படகின் இயந்திரக்கோளாறு காரணமாக இவ்வாறு கரைகரைசேர்ந்துள்ளனர்.
இவர்கள் பருத்தித்துறை கடலுக்குள்  வெள்ளிக்கிழமை  அதிகாலை மீன்பிடிக்க சென்ற வேளை காணாமல் போனதாக மீனவர்களின் உறவினர்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து, சக்கோட்டை மீனவ சங்கத்தின் இரண்டு மீனவ படகுகள் தேடுதல் நடத்தியும் காணாமற்போனவர்களை மீட்க முடியவில்லை.
கடற்கொந்தளிப்பால் தேடுதலுக்கு சென்ற மீனவ படகுகளும் மீண்டும் கரைக்கு திரும்பின. இந்நிலையில் இம் மீனவர்கள் கரையொதுங்கியுள்ளனர்.
மேற்படி 3 மீனவர்களும் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது தற்காலிகமாக சக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாத்தறை ‘றொட்டஹொட’ பகுதியை சேர்ந்த 5 மீனவர்கள் வல்வெட்டித்துறை ஆதிகோவில் கடற்பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை 4 மணிக்கு கரையொதுங்கியுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள பிரதிப்பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி, சனிக்கிழமை (29) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவர்கள் கடந்த 18ஆம் திகதி மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற டேவிட்சில்வா பிரசாந்த (வயது45), சுமிபால கசித் மதுசாந்த  (வயது25), விஜி தனிஸ்ரர் (வயது41), அரியதாஸ் பிரதீப் குமார் (வயது26),  சமதாஸ ஜெனக (வயது 35) ஆகியோர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
தற்போது பெய்து வரும் அதிக மழை காரணமாக கடல் கொந்தளிப்பாக உள்ளமையால் இந்த மீனவர்களுடன் 1 றோலர் படகு சேதமடைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
மீனவர்களையும் படகினையும் வல்வெட்டித்துறை ஆதிகோவில் மீனவர் சங்கத்தினர் மீட்டதுடன் அவர்களுக்கான உணவுகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் இம் மீனவர்கள் தொடர்பாக மாத்தறை மீனவர் சங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 22 நவம்பர், 2014

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய ???

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் நிலையத்தில்  பாப்லி தேவி புகார் மனு கொடுத்துள்ளார்.

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள பிக்ரம் கிராமத்தில் ராகேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன் பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார் திருமணம் செய்யும் முன் வீட்டில் கழிப்பறை கட்டிகொடுப்பேன் என்று கூறி பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார்.இவர் கார்பெண்டராக வேலை பார்த்துவருகிறார்.

இது குறித்து பாப்லி தேவி கூறியதாவது;

என் கணவரை கழிப்பறையை கட்டிகொடுக்க சொல்லி கேட்டபோது அவர் தட்டி கழித்து வந்தார்.மேலும் இது பற்றி கேட்டபோது அவர் என்னை தாக்கி உள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறுவது மரியாதை ஆகும்.

வீட்டில் கழிப்பறை என்பது சுகாதரம் மற்றும் கவுரம் ஆகும் என்று குறிப்பிட்டார்.எனக்கு என் பெற்றோர் ஆதரவு உள்ளது. கணவர் வீட்டில் கழிப்பறை கட்டும் வரை நான் அவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்.

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாதது அவமானமாக கருதுகிறேன். கழிப்பறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியது. என்னுடைய மைத்துனி மற்றும் மாமியார் காலை கடனை கழிப்பதற்காக இருட்டில் திறந்தவெளியில் செல்லவது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 16 நவம்பர், 2014

நுளம்புகளுக்கு இடங்கொடுத்தவர்களுக்கு எதிராக வழக்கு

டெங்கு பரவக்கூடிய வகையில் சுற்றுச்சூழலை வைத்திருந்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ். பொலிஸார், சனிக்கிழமை (15) தெரிவித்தனர். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிகள், நல்லூர் பிரதேச சபையினருடன் யாழ். பொலிஸாரும் இணைந்து நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஜே 124 கிராமசேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை சனிக்கிழமை (15) மேற்கொண்டிருந்தனர். இவ் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில், டெங்கு பரவக்கூடிய சூழலினை வைத்திருந்த பலர் எச்சரிக்கை செய்யப்பட்டதுடன், தீவிரமாக டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில், சுற்றாடலை வைத்திருந்த மேற்படி 10 பேருக்கு எதிராக எதிர்வரும் 20ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர். தற்போது மழை காலமாகையால் டெங்கு பரவும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், அதனை தடுக்கும் வகையில் வீட்டு, கட்டிட உரிமையாளர்கள் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சிரட்டை, இளநீர், பொலித்தீன் பைகளை அகற்றி ஒத்துழைக்குமாறு பொலிஸார் யாழ்ப்பாண பொதுமக்களை கேட்டுள்ளனர். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 14 நவம்பர், 2014

நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

 குழந்தைகளின் சிரிப்பில் தெய்வத்தை காணலாம் என்பார்கள், உண்மையில் குழந்தைகள் தான் தெய்வங்கள்.
கள்ளம் கபடம் அறியாத குழந்தைகளை மகிழ்விப்பதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் திகதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
நேரு அவர்கள், வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 
இந்நாளில், அழகுக்குழந்தைகள் தங்களை இன்னும் அழகுபடுத்தி பள்ளிக்கு செல்வார்கள்.
தாங்கள் விரும்பும் தலைவர்கள் போல் மாறுவேடமிட்டு, பள்ளியில் நடித்துக்காட்டி பரிசையும் வெல்வார்கள்.
அன்று, இவர்களின் கொண்டாட்டத்தால் பள்ளி முழுவதும் சிரிப்பு மழை சூழும், பள்ளி மட்டுமல்லாமல் வீடுகளிலும் ஒரே கொண்டாட்ட கலவரம் தான்.
சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து, பட்டாம் பூச்சிகளாய் பறக்கும் இவர்களின் வயதில் கவலைகள் என்ற ஒன்றிற்கு இடம் இருக்காது.
வீட்டின் தாய் தந்தையரின் அரவணைப்பு, பள்ளியில் ஆசிரியர்களின் அறிவுரை, தோழ் கொடுக்கும் தோழன் என அனைவராலும் சூழப்பட்ட வாழ்க்கை வாழ்வது குழந்தைப் பருவத்திலும், மாணவப் பருவத்திலும் தான்.
இப்படி தனக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ளும் இவர்கள், அடுத்தகட்டமாக சாதனை என்ற ஒன்றை நோக்கி பயணிக்கிறார்கள்.
ஏனெனில் சுறுசுறுப்பு, சாதிக்க துடிக்கும் எண்ணம் போன்றவை இந்த வயதில் தான் தோன்றும்.
சாதனை, அரவணைப்பு என ஒருபுறம் பாதையில் குழந்தைகள் பயணித்துக் கொண்டிருந்தாலும், மறுபுறம் குழந்தை தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
குழந்தைகள் தினமான இன்று, குழந்தை தொழிலாளர்களையும் நினைவுகூறத்தான் வேண்டும்.
ஏனெனில், குழந்தைகள் தினத்தில் அழகாக அலங்கரிக்க குழந்தைகள் ஒருபுறம், அலங்கோலமாக காட்சியளிக்கும் குழந்தைகள் என பாகுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
விளையும் பயிர்களை விதையிலேயே வீணாக்காதீர்கள் என்பதற்கேற்ப, குழந்தைகள் தினமான இன்று, அறிவுரை, நல்லொழுக்கம் எனும் உரங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை வளர்ப்போமாக.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சிறுநீரை மாற்றி கொடுத்து மாட்டிய பஸ் டிரைவர்!

  எகிப்து நாட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபடி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். அதில் ஒருவர் மட்டும் தனது போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். அந்த பஸ் டிரைவரின் மனைவி 2 மாத கர்ப்பமாக உள்ளதால்,
 அந்த சிறுநீர் பரிசோதனையில் பஸ் டிரைவர் கர்ப்பம் என தெரிய வந்தது. விசாரணையில் சிறுநீர் உங்களுடையது தானா என அதிகாரிகள் கேட்க, பிரச்சினையில் இருந்து தப்பிக்க அந்த டிரைவர் ஆமாம் என்று கூறியுள்ளார். அதிகாரி சிரிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் கை குலுக்கி ‘நீங்கள் கர்ப்பம் அடைந்து உள்ளீர்கள், எனது வாழ்த்துக்கள்’ என கூறி சென்றுவிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 2 நவம்பர், 2014

ரவுடிகளை துரத்தித் துரத்தி வெட்டிய பாடசாலையின் மாணவன்!

  யாழ் இந்துக் கல்லுாரிக்கு அண்மையில் பஸ்சிற்காக காத்திருந்த 16 வயது மாணவனை அங்கு வந்த சில ரவுடிகள் செயின்கள் மற்றும் பொல்லுகளால் தாக்கிய போது மாணவன் தான் மறைத்து வைத்திருந்த வாளினால் அவா்களைத் துரத்தித் துரத்தி தாக்கியதில் மாணவனைத் தாக்கிய ரவுடிகள் கழுத்து மற்றும் கைகளில் கடும் காயங்களுக்கு
உள்ளாகிய நிலையில் ஓடி மறைந்துள்ளனா். இச் சம்பவத்தை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அங்கு வந்து பொலிசாாா் மாணவனைக் கைது செய்துள்ளனா். இதே வேளை மாணவனைத் தாக்கியவா்கள் யாா் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது
மாணவன் எதற்காக பாடசாலைக்கு வாள் கொண்டு வந்தாா் என்பதும் மாணவனை எதற்காக ரவுடிகள் தாக்கினாா்கள் என்பது பற்றியும் பொலிசாா் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். இதே வேளை
  யாழ்ப்பாணபப் பாடசாலைகளில் மாணவா்களிடேயே போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள அதே வேளை ரவுடிகளுடனான தொடா்புகளும் அதிகரித்துக் காணப்படுவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 30 அக்டோபர், 2014

அமெரிக்கா, இந்தியா உதவிகளை வழங்கத் தயார் என அறிவிப்பு!

 பதுளை நிலச்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
இதேபோன்று மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரீசிடம் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 27 அக்டோபர், 2014

கடற்பரப்பில் பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்பு!!

h
வெள்ளவத்தை கடற்பரப்பில்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தை கடற்பரப்பில் உள்ள கற்பாறைகளுக்கிடையிலிருந்தே குறித்த  சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

தொடருந்துகளின் முற்பதிவுகள் வியாழன் வரை நிறுத்தம்!

யாழ்- கொழும்பு செல்வதற்கான தொடருந்துகள்  அனைத்தும்
 இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத தொடருந்து நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான தொடருந்துகள் முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் தொடருந்துகள்  நிலையம் வருகை தந்தனர்.
இந்நிலையில், யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் தொடருந்து ஆகிய தொடருந்து இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன.
 
அத்துடன், யாழ் - கொழும்பு – மாத்தறை  ஞாயிற்றுக்கிழமை மட்டும் செல்லும் தொடருந்து இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன.
இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக, குறித்த தொடருந்துகள்  மேலதிகப் பெட்டிகளை இணைப்பது பற்றி உத்தேசிக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 22 அக்டோபர், 2014

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள். மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம் தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பசுக்களை இறைச்சிக்காக கொண்டு சென்ற மூவர் கைது…!!

நோர்வூட்  பகுதியில் பசு மாடுகள் மூன்றை இறைச்சிக்காக அனுமதிப் பத்திரம் இல்லாமல் கொண்டு சென்ற மூவர் நோர்வூட் பகுதியில் வைத்து இன்று (19) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தில் இருந்து அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் குறித்த மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பொலிஸார் அந்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தியபோது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது
. பின்னர் மாட்டைக் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்த பொலிஸார் லொறியையும் கைப்பற்றினர். அத்தோடு பசு மாடுகளை பிரதான வீதியில் கொண்டு செல்லாமல் தோட்ட குறுக்கு வழியாக கொண்டு செல்ல முற்பட்டதாகவும், கால்நடை வைத்தியரின் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கொண்டு சென்றதாகவும் தொடர்ச்சியாக பால் கரந்து கொண்டிருக்கும் பசு மாடுகளையே இவ்வாறு
கொண்டு சென்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாடுகளின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. லொறியையும் சந்தேகநபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

அகதிகள் வழக்கின் தீர்பை ஒத்தி வைத்தது அவுஸ்ரேலிய நீதிமன்றம்!!

ஈழ அகதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழ அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்று வந்தது.
இதன் போது அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கோ, நவுறு தீவுக்கோ மாற்றாமல், கடலில் கப்பல் ஒன்றில் ஒரு கால காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அவுஸ்திரேலியா மேற்கொண்ட குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித் அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதால் அவர்கள் உயிராபத்தை சந்திக்கவிருந்ததாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும் ஈழ அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதே சரியான முடிவு என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 14 அக்டோபர், 2014

உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகள் கைது

கொழும்பு துறைமுகத்தில் உள்ள வாகனச்சாலையில் வாகன உதிரிப்பாகங்களை திருடிய இரு சுங்க அதிகாரிகளை துறைமுக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 11 அக்டோபர், 2014

நடைபெற்றது பரீட்சார்த்த சேவையாக பளை யாழ் புகையிரதசேவை!

பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் பரீட்சார்த்தமான இறுதி புகையிரத் சேவை இடம் பெற்றது.
பளையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பாரம்பரிய கைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுனர் இந்தியாவின் புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் அரச உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவாகள் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத்தில் பயணம் செய்தார்கள்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய திறப்பு விழாவையும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையையும் திங்கள் கிழமை ஆரும்பித்த வைக்கவுள்ள நிலையில் இன்ற இந்த பரீட்சார்த்த புகையிரத சேவை இடம் பெற்றுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திறக்கு வந்த புகையிரதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்து கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 10 அக்டோபர், 2014

புராதன பொருட்களுடன் புலியங்குளத்தில் இருவர் கைது!

 புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா - புலியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புலியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்துள்ளனர். அதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புலியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

இலங்கை பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தார் ஆப்கானிஸ்தான் பிரஜை!

குவைத்தில் வசித்துவந்த தனது காதலியான 33வயதான இலங்கை பெண்ணை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தாக கூறப்படும் ஆப்கானிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஹாலில் பிரதேசத்திலுள்ள இடம்மொன்றில் வைத்தே அந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
குறித்த இலங்கை பெண் தனது நண்பருடன் உறவை கொண்டிருந்ததாக சந்தேகித்தே தாம் அவரை கொலை செய்ததாக ஆப்கானிஸ்தானியர் ஏற்றுக்கொண்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 9 அக்டோபர், 2014

அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். குறைந்த செலவில்

 பெண்களின் பல்வகை நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது கீரைத்தண்டு! குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.
   
பச்சைத்தண்டு கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும். செங்கீரைத்தண்டு பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும்.

 

திங்கள், 6 அக்டோபர், 2014

தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி

யாழ். ஆணைக் கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த பி. விமலதேவி (வயது 46) 5 பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சமயம் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

8 பிள்ளைகளை பெற்ற அவரது தாய் மகளுடன் இருந்து பிரிந்து சென்றும், ஏனைய பிள்ளைகளை கவனிக்காமல் விட வீதியில் தனது தாய் அலைந்து திரிவதை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் பிள்ளைகளின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்!

அச்சுவேலியில்  சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், குடும்பஸ்தர் ஒருவரை அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குட்டியப்புலம், செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் சந்தேகநபரின் வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமிக்கு கொப்பி, பென்சில்கள் தருவதாக ஆசை வார்த்தை கூறி அருகில் உள்ள தோட்டத்துக்குள் கூட்டி சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தார்.
தனக்கு நடந்தவற்றை சிறுமி பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அப்பகுதி கிராம சேவையாளர் தெல்லிப்பழை பிரதேச நன்னடத்தை உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக நன்னடத்தை உத்தியோகத்தர் கடந்த 26ஆம் திகதி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் யாழ்.பெண்கள் சிறுவர் நீதிமன்ற நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, சந்தேக நபரை கைதுசெய்து மன்றில் முற்படுத்துமாறு அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை செல்வநாயகபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் சிறுவர் நீதிமன்ற நீதிவான் ஜீவராணி கறுப்பையாவின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய வேளை சந்தேகநபரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

வாய் விட்டு சிரித்தால் 32 பற்களும் தெரிகிறது என்பார்கள். ஆனால் ஒரு சிறுவனுக்கு கூடுதலாக தெரிகிறது. இவரின் பற்கள் இரண்டு வரிசையாக காட்சியளிக்கின்றனர். இங்கிலாந்தில் சாக் பிரவுன் என்ற எட்டு வயது சிறுவனுக்கு இது போன்ற கூடுதலான பற்களால் சாப்பிடுவதற்கோ அல்லது வேறு எந்த வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என சிறுவனது தாயார் கூறுகிறார். ஆனால் பல் துலக்குவதற்கு மட்டும் கூடுதல் நேரம் ஆகிறதாம்.
திமிங்கிலத்தை போன்று இரண்டு அடுக்குகளாக பற்கள் உள்ளதால் இச்சிறுவனது நண்பர்கள் இவரை ஜாஸ் என்று புணைபெயரில் அழைக்கிறார்கள். தற்காலிக பற்கள் முழுமையாக விழுந்து முளைப்பதற்கு காத்திருக்கிறோம் பின்னர் இரண்டு மூன்று வருடத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து பற்களை சீரமைக்க உள்ளோம் என்பதாக இச்சிறுவனது தாயார் தெரிவித்துள்ளார்.
 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

கட்டுநாயக்கவில் வௌிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஒரு தொகை வௌிநாட்டு நாணயத்தை இலங்கையில் இருந்து கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 45 இலட்சம் பெறுமதியான நாணயங்கள் சந்தேகநபரிடம் இருந்து சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பிச் செல்ல முற்பட்ட வேளை இன்று காலை இவர் கைதாகியுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவர் என சுங்கப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கிடையில் கை கைலப்பு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களுக்கிடையிலான கை கைலப்பில் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர், பாடசாலை விட்டு வெளியிடத்தில் மது அருந்திய வேளை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடம்பெற்ற கைகலப்பின்போது, ஆசிரியர் ஒருவர் மற்றைய ஆசிரியரின் தலையில் போத்தலால் அடித்துள்ளார். இதன்போதே அவர் பலத்த காயத்திற்குள்ளானதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாடசாலை சமூகம் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

எதிர்வரும் வாரங்களில் யாழில் 1 காணிகள் ஆக்கிரமிக்கப்படவுள்ளன!!

எதிர்வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 1300 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிக்கப்படவுள்ளன.
ஆங்கில ஊடகம் ஒன்றை இதனைத் தெரிவித் துள்ளது.
யாழ்ப்பாணம் மாதகல், திக்கம், நுனாவில், சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி போன்ற பகுதிகளில் இந்த காணி ஆக்கிரமிப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணிகளாக அவை இருந்த போதும், அவை இராணுவத்தின் தேவைக்காக ஆக்கிரமிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப் போவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்த வார இறுதியில் இந்த காணிகளை அளவீடு செய்யும் பணிகள் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

மாணிக்கசோதி விபத்தினில் மரணம்!

.    பனிக்கன்குளம் பகுதியினில் ஏ-9 வீதியினில்  இடம்பெற்ற வாகன விபத்தினில் முன்னணி கருத்தியலாளரான அபிமன்னசிங்கம் மாணிக்கசோதி (வயது 74) மரணமாகியுள்ளார்.அவர்  பயணித்த ஹயஸ் வான் நேற்றிரவு திங்கட்கிழமை விபத்திற்குள்ளாகியிருந்தது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவருடன் மற்றொருவரான செல்லத்துரை செல்வகுமார்(வயது 70) என்பவரும் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உடுவிலை சேர்ந்த மாணிக்கசோதி அபிமன்னசிங்கம் (வயது 74), ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியுமான சாந்தா அபிமன்னசிங்கத்தின் சகோதரருமாவார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இவர்களது வான், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
1990 ம் ஆண்டினில் இந்திய அமைதிப்படை பிரசன்னமாகியிருந்த காலப்பகுதியினில் வன்னி காடுகளிலினுள் பதுங்கியிருந்த விடுதலைப்புலிகள் தலைமைக்கும் அப்போதைய பிரேமதாசா அரசிற்குமிடையேயும் சமரசப்பேச்சுக்களை நடத்திய முகவராக மாணிக்கசோதி செயற்பட்டிருந்தார்.விடுதலைப்புலிகள் தலைமை மீது கடைசி வரை பற்றுக்கொண்டிருந்ததுடன் பகிரங்கமாகவே அவர் அதனை வெளிப்படுத்தியும் வந்திருந்தார்.
கடைசியாக நடந்த வடமாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக அவர் களமிறங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 13 செப்டம்பர், 2014

ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன கப்பலை கனடியர்கள் கண்டுபிடித்தனர்

160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரித்தானிய ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். ship discovery ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, கடல் அகழாய்வில் மிக முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. "இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது" என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார்.
   நோர்த் வெஸ்ட் பாஸேஜைக் கண்டுபிடிக்க சர் ஜான் ஃப்ராங்க்ளின் 129 பேருடன் இரு கப்பல்களில் புறப்பட்டார். 1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைக்கக்கூடிய "நார்த் வெஸ்ட் பாஸேஜ்" எனப்படும் பாதையை கண்டறிவதற்காக சர் ஜான் ஃப்ராங்க்ளின் என்பவர், 129 பேருடன் இரண்டு கப்பல்களில் புறப்பட்டார்.
ஆனால், விரைவிலேயே இந்த இரண்டு கப்பல்களும் காணமல் போயின. விக்டோரியா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிக்கான கடல் பயணங்களிலேயே தீராத சில மர்மங்களில் ஒன்றாக இந்தக் கப்பல் விவகாரமும் நீடித்துவந்தது. 2008ஆம் ஆண்டில் ஃப்ராங்க்ளின் கப்பல்களைத் தேடும் பணியை கனடா அரசு துவங்கியது. ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருக ஆரம்பித்ததால், அந்தப் பகுதியில் கப்பல்கள் செல்வது சாத்தியமாகியிருக்கும் நிலையில், நார்த்வெஸ்ட் பாஸேஜ் மீது தனக்கு இறையாண்மை இருக்கிறது என்பதை உறுதிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையில் கனடா அரசு ஈடுபட்டது.
கிங் வில்லியம் தீவுக்கு அருகில் விக்டோரியா நீரிணையில் தேடல் குழுவினரால் எதிரொலிமானி மூலம் தற்போது எடுக்கப்பட்டிருக்கும் படங்கள், கடலடியில் கப்பலின் பாகங்கள் இருப்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளன.
கனடாவின் மாபெரும் மர்மம்
"ஃப்ராங்க்ளின் ஆய்வுப் பயணத்தில் சென்ற இரண்டு கப்பல்களில் ஒன்று கண்டறியப்பட்டிருப்பதன் மூலம், கனடாவின் மாபெரும் மர்மங்களில் ஒன்று தீர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ஸ்டீஃபன் ஹார்ப்பர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். "ஒரு கப்பலைக் கண்டுபிடித்திருப்பது, இன்னொரு கப்பலைக் கண்டுபிடிப்பதற்கும், ஃப்ராங்க்ளின் தேடல் குழுவுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.
100 வருடங்களுக்கு முன்பாக, பண்டைய எகிப்திய மன்னனான துதன்காமுனின் சமாதி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகு, மிகப் பெரிய அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிபிப்பு இதுதான் என பிரித்தானிய அகழ்வாராய்ச்சியாளரான வில்லியம் பாட்டர்ஸ்பை குறிப்பிட்டுள்ளார். ship discovery ஃப்ராங்க்ளின் கடல் பயணத்தில் எச்எம்எஸ் ஈர்பஸ், எச்எம்எஸ் டெரர் என இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஃப்ராங்க்ளினின் பயணத்தில் "எச்எம்எஸ் ஈர்பஸ்", "எச்எம்எஸ் டெரர்" என இரண்டு கப்பல்கள் ஈடுபட்டன. இந்தக் கப்பல்கள் காணாமல் போன பிறகு 1848லிருந்து 1859வரை இந்தக் கப்பல்களைத் தேடும் முயற்சி நடைபெற்றது.
அந்தக் குழுவினருக்கு என்ன ஆனது என்பது கண்டுபிடிக்கப்படாததால், பல ஆண்டுகளாக இந்த மர்மம் நீடித்துவந்தது. கிங் வில்லியம் தீவுக்கு அருகில் இந்தக் கப்பல்கள் பனிக்கட்டிக்குள் சிக்கியிருந்திருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். அதனால், தாங்களாவது பாதுகாப்பாக தப்பிக்கலாம் என்ற நோக்கில், கப்பலில் இருந்தவர்கள் கப்பல்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறியிருக்கலாம்.
அப்படித் தப்பியவர்கள், மரணமடைவதற்கு முன்பாக, உணவு கிடைக்காமல் மனிதர்களையும் தின்றனர் என அப்பகுதியில் வசிக்கும் இன்னூயிட்டுகள் கூறியதாக சில தகவல்களும் உண்டு. சர் ஜான் ஃப்ராங்க்ளினின் மனைவி, தன் கணவரைத் தேடுவதற்காக ஐந்து கப்பல்களை அனுப்பிவைத்தார். அவர்கள் தப்பியிருந்தால் உணவுக்கு ஆகும் என உணவுக் கேன்களும் பனிக்கட்டிகளில் வைக்கப்பட்டன. மொத்தமாக 50 முறை இப்படித் தேடல்கள் நடத்தப்பட்டன.
கப்பல் குழுவினர் எப்படி இறந்தனர்? - இதற்கு நூறாண்டுகளுக்குப் பிறகு 1980களில் மூன்று உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை ஆய்வுசெய்தபோது, அந்த உடல்களில் அதிக அளவில் காரீயம் இருந்தது தெரியவந்தது. அவர்களது உணவு கேன்கள் சரியாக மூடப்படாததால், உணவில் காரீயம் கலந்து 129 பேரும் இறந்திருக்கலாம் என்று நம்பப்பட்டது. ஆனால், சமீப கால ஆய்வுகள், ஃப்ராங்க்ளின் குழுவினருக்கு வழங்கப்பட்ட உணவுக் கேன்களில் பிரச்சனையில்லை என்றும் கப்பலின் உள் குழாய்களிலிருந்தே காரீயம் உணவில் கலந்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டுகின்றன.
ஃப்ராங்கிளினின் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது கடல் அகழாய்வில் மிக எதிர்பார்க்கப்பட்ட, முக்கியமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. 2008ஆம் ஆண்டிலிருந்து கனடாவைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் இந்தக் கப்பலைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

பூமியை நோக்கி வேகமாக வரும் சூரியப் புயல்! பூமியைத் தாக்குமா?

வலுவான சூரியப் புயல் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சூரியப் புயல் மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் (அதாவது 4.02மில்லியன் கிலோ மீட்டர் வேகம்) என்ற மித வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாளை இது பூமிக்கு அருகே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனின் மையப் பகுதியிலிருந்து புறப்படும் இத்தகைய புயல் பூமிக்கு வருவது என்பது மிகவும் அரிதான நிகழ்வே. பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியப் புயல் பூமியை நோக்கி வருகிறது என்று கொலராடோவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் டாம் பெர்ஜர் கூறுகிறார்.
இது பார்க்க சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது. ஆனால் பூமிக்கு வரும்போது சூரியப் புயல் என்ற அளவிலேயே வரும். சாட்டிலைட் தரவுகள் இது பற்றிய தகவல்களை வழங்கியுள்ளது. அதன் மோசமான ஆற்றல் துகள் நெருப்பு மயமாக பூமிக்கு மேலேயோ, வடக்குப் பகுதியிலோ செல்லலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பூமியின் காந்தப் புலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் மின் வினியோக அமைப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மின்சார அமைப்பையே சேதம் செய்து விடக்கூடியதல்ல, இதனால் சாட்டிலைட்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன்களில் சிறிய அளவு தொந்தரவு ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
மணிக்கு 2.5 மில்லியன் மைல்கள் வேகத்தில் இது வந்து கொண்டிருக்கிறது என்பதால் நாளை பூமிக்கு அருகில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரியப் புயல்கள் சூரிய சுழற்சியின் உச்சத்தில் ஏற்படுவது. இவை பொதுவாக மக்களுக்கு ஊறு விளைவிப்பதல்ல. ஆனால் இந்த முறை, சூரியனில் பெரும் காந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் திசை நம்மை நோக்கி நேராக இருக்கிறது. இதன் அதி ஆற்றல் மிக்க மற்றும் காந்தமாக்கச் சக்தியினால் பூமியின் காந்தப் புலத்தில் தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் மின்சார அமைப்புகளில் தற்காலிக இடையூறுகள் ஏற்படலாம் என்கிறார் பெர்ஜர்.
 

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 8 செப்டம்பர், 2014

இரு புதிய பாடநெறிகள் ல்கலையில்

2013/2014 ஆண்டு பல்கலைக்கழக கல்வியாண்டிற்கு இரண்டு புதிய பாட நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல்துறை தொடர்பான பாடநெறியொன்றும், களனி, சப்ரகமுவ மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகங்களில் மொழிபெயர்ப்பு ஆய்வுகள் தொடர்பான பாடநெறியொன்றும் அறிமுகப்படு த்தப்பட்டுள்ளது.
.பொ.. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 246,665 மாணவர்களில் 143,740 பேர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். எனினும் 2013/2014 பல்கலைக்கழக கல்வியாண்டுக்கு 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்த 55,988 பேரில் 24,178 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பான வெட்டுப்புள்ளிகள் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டிருந்தது.
 
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மீண்டு தாய்மொழியை மறந்த இளைஞர் (காணொளி இணைப்பு)

 அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஒருவாரமாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனது தாய் மொழியை மறந்து விட்டு சீன மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்மேகன் (Ben McMahon- age 22) என்ற நபர் பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மெக்மேகன் கோமாவில் இருந்து மீண்டு எழுந்த போது அருகில் இருந்த செவிலியரை பார்த்து சீன மொழியில் பேசியுள்ளார்.
பின்னர் செவிலியரிடம் ஒரு காகிதம் மற்றும் பேனா கேட்டு வாங்கி சீன மொழியில், தனது தாய் மற்றும் தந்தை மீது மிகுந்த அன்புள்ளதாகவும், தான் உடல் நலம் தேறிவிட்டதாகவும் எழுதி காட்டியுள்ளார்.
இவரின் புது மொழி திறனை கண்டு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
மேலும் மெக்கேனுக்கு தனது தாய் மொழியை நினைவுபடுத்த மூன்று தினங்கள் ஆகியுள்ளது. இவர் தனது பள்ளிக்கூடத்தில் சீன மொழி படித்து வந்தாலும், அதில் சரளமாக பேசக்கூடிய திறமை இல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இவரின் பேச்சு திறனைக்கண்டு இவருக்கு சீன தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. மேலும் இவர் சீனாவிற்கு சென்று தனது பட்டப்படிப்பை தொடர உள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

புதன், 3 செப்டம்பர், 2014

கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் நேற்று நிகழ்ந்தது.
விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
எனினும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தின் இடது இறக்கையில் பிரச்சினை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அது திருத்தப்பட்ட நிலையில் விமானம் 10 மணித்தியாலம் தாமதமாக பேர்த்தை சென்றடைந்தது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தாயை விலைபேசிய வாலிபர் ஒருவர்

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் இவர் விதித்த 4 நிபந்தனைகள்
•அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும்
•அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும்.
•போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது
•வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும்
இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப எனக்கு தாயாக இருந்தால் அவருக்கு ரூ. 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையெழுத்து, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு!

    நாசா எச்சரிக்கை!!. சூரியனில் மிக வீரியமான பிழம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்தச் சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொரு 11 ஆண்டு களுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும். வெளிப்படும் சில நெருப்புப் பிழம்புகளின் அளவு பூமியின் அளவைப் போன்று 14 மடங்கு அதிகமாக இருக்கும். அதிலிருந்து கதிரியக்கமும் ஏற்படும்.
   இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள 'சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி' எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது. இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறும்போது, "இந்தச் சூரியப் பிழம்பு கள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும்வரை இந்த‌ப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள பிற உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தன் தரை, கடல் மற்றும் வான்வழி தொலைதொடர்பு சாதனங்க ளை எல்லாம் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

புதன், 27 ஆகஸ்ட், 2014

தோப்பு அச்சுவேலி கைத்தொழில் போட்டை திறப்பு!


                  இந்திய மற்றும் சிறீலங்கா அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச இன்று திறந்துவைத்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அதிகார சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலியில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட இந்தக் கைத்தொழில் பேட்டையில் 22 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கைத்தொழில் பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் சிறீலங்கா அரசு 50 மில்லியன் ரூபா நிதியுதவியையும் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில்


ஈழத்துச் சிறுமியின் தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில் நனைந்த அரங்கம்

மற்றைய செய்திகள்


 

செவ்வாய், 15 ஜூலை, 2014

நண்பனை கசூரினாக் கடலில்அமிழ்த்திக் கொல்ல முயன்ற இருவர் கைது!

 
காரைநகர் கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
   கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
மற்றைய செய்திகள்

வியாழன், 3 ஜூலை, 2014

காற்றில் பறந்த வீடு: உயிர் பிழைத்த அதிசயம் (காணொளி)

அமெரிக்காவில் வீசிய புயல் காற்றினால் வீடு ஒன்று பறந்து சென்றதில் அதிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். கடந்த 16ம் திகதி அமெரிக்காவின் நெப்ரெஸ்கா நகரில் வீசிய பலத்த புயல் காற்றினால் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 350 பேரின் வீடுகளை அடித்து சென்ற இந்த புயல் காற்றில், ஒரே ஒரு வீடு மட்டும் காற்றில் பறந்து சென்று மீண்டும் அதே இடத்தில் 180 டிகிரி கோணத்தில் அமர்ந்துள்ளது. இந்த புயல் காற்று வீட்டை அடித்து செல்லும் காட்சி காணொளி ஒன்றில் படமாகியுள்ளது. இங்கிருந்த சாவேஜ் (25) என்ற நபர் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் போர்வையுடன் இருந்துள்ளனர். காற்றில் போர்வை பறந்து சென்றாலும் இவர்கள் படுகாயம் ஒன்றும் அடையாமல் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். இதுகுறித்து புயலின் போது வீட்டிலில்லாத சாவேஜின் மனைவி ஜூலி கூறுகையில், இவர்கள் மூவரும் எப்படி தான் தப்பித்தார்களோ தெரியவில்லை என தளதளர்த்த குரலில் அழுதுகொண்டே கூறியுள்ளார். ஒபாமா படு மோசம்: மக்களின் நறுக் பதில்கள்

  மற்றைய செய்திகள்
 
 
 

 

நவற்கிரி காலநிலை