siruppiddy

திங்கள், 6 அக்டோபர், 2014

தாயாரின் நிலை கண்டு மகள் தற்கொலை முயற்சி

யாழ். ஆணைக் கோட்டை சோமசுந்தரம் வீதியை சேர்ந்த பி. விமலதேவி (வயது 46) 5 பிள்ளைகளின் தாய் இன்று தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சமயம் பிள்ளைகளால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

8 பிள்ளைகளை பெற்ற அவரது தாய் மகளுடன் இருந்து பிரிந்து சென்றும், ஏனைய பிள்ளைகளை கவனிக்காமல் விட வீதியில் தனது தாய் அலைந்து திரிவதை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
எனினும் பிள்ளைகளின் முயற்சியால் காப்பாற்றப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை