siruppiddy

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பசுக்களை இறைச்சிக்காக கொண்டு சென்ற மூவர் கைது…!!

நோர்வூட்  பகுதியில் பசு மாடுகள் மூன்றை இறைச்சிக்காக அனுமதிப் பத்திரம் இல்லாமல் கொண்டு சென்ற மூவர் நோர்வூட் பகுதியில் வைத்து இன்று (19) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பிரதேசத்தில் இருந்து அக்கரப்பத்தனை பசுமலை பிரதேசம் வரை, லொறி ஒன்றில் குறித்த மாடுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. பொலிஸார் அந்த லொறியை மறித்து விசாரணைக்குட்படுத்தியபோது, அனுமதி பத்திரம் இல்லாமல் மாட்டை கொண்டு செல்வது தெரியவந்துள்ளது
. பின்னர் மாட்டைக் கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரையும் கைதுசெய்த பொலிஸார் லொறியையும் கைப்பற்றினர். அத்தோடு பசு மாடுகளை பிரதான வீதியில் கொண்டு செல்லாமல் தோட்ட குறுக்கு வழியாக கொண்டு செல்ல முற்பட்டதாகவும், கால்நடை வைத்தியரின் எவ்விதமான அனுமதியும் இல்லாமல் கொண்டு சென்றதாகவும் தொடர்ச்சியாக பால் கரந்து கொண்டிருக்கும் பசு மாடுகளையே இவ்வாறு
கொண்டு சென்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாடுகளின் பெறுமதி மூன்று இலட்சம் ரூபாய் என தெரியவந்துள்ளது. லொறியையும் சந்தேகநபர்களையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை