siruppiddy

சனி, 11 அக்டோபர், 2014

நடைபெற்றது பரீட்சார்த்த சேவையாக பளை யாழ் புகையிரதசேவை!

பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியளவில் பரீட்சார்த்தமான இறுதி புகையிரத் சேவை இடம் பெற்றது.
பளையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பாரம்பரிய கைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா போக்குவரத்து பிரதி அமைச்சர் மற்றும் வட மாகாண ஆளுனர் இந்தியாவின் புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகள் யாழ் மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் அரச உயர் அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவாகள் பளையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத்தில் பயணம் செய்தார்கள்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய திறப்பு விழாவையும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையையும் திங்கள் கிழமை ஆரும்பித்த வைக்கவுள்ள நிலையில் இன்ற இந்த பரீட்சார்த்த புகையிரத சேவை இடம் பெற்றுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திறக்கு வந்த புகையிரதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் பாடசாலைகளின் மாணவிகள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வைத்து கைதட்டி ஆர்ப்பரித்து வரவேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை