siruppiddy

வெள்ளி, 10 அக்டோபர், 2014

புராதன பொருட்களுடன் புலியங்குளத்தில் இருவர் கைது!

 புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் சிலவற்றை கனடாவிற்கு கொண்டு செல்ல முயற்சித்த இருவர் வவுனியா - புலியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றை புலியங்குளம் பகுதியில் வைத்து வழிமறித்த பெரியமடு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சோதனை செய்துள்ளனர். அதன்போது குறித்த முச்சக்கர வண்டியில் இருந்து 5 சங்குகள் உள்ளிட்ட புராதன பெறுமதி வாய்ந்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புராதன பொருட்களுடன் புலியங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை