siruppiddy

வியாழன், 16 அக்டோபர், 2014

அகதிகள் வழக்கின் தீர்பை ஒத்தி வைத்தது அவுஸ்ரேலிய நீதிமன்றம்!!

ஈழ அகதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற ஈழ அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு தினங்களாக இடம்பெற்று வந்தது.
இதன் போது அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கோ, நவுறு தீவுக்கோ மாற்றாமல், கடலில் கப்பல் ஒன்றில் ஒரு கால காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை அவுஸ்திரேலியா மேற்கொண்ட குற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் குறித் அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதால் அவர்கள் உயிராபத்தை சந்திக்கவிருந்ததாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
எனினும் ஈழ அகதிகளை இந்தியாவுக்கு அனுப்புவதே சரியான முடிவு என்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை