siruppiddy

சனி, 22 நவம்பர், 2014

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறிய ???

பீகாரில் கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் வீட்டிற்க்கு சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து போலீஸ் நிலையத்தில்  பாப்லி தேவி புகார் மனு கொடுத்துள்ளார்.

பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள பிக்ரம் கிராமத்தில் ராகேஷ் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு முன் பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார் திருமணம் செய்யும் முன் வீட்டில் கழிப்பறை கட்டிகொடுப்பேன் என்று கூறி பாப்லி தேவியை திருமணம் செய்துள்ளார்.இவர் கார்பெண்டராக வேலை பார்த்துவருகிறார்.

இது குறித்து பாப்லி தேவி கூறியதாவது;

என் கணவரை கழிப்பறையை கட்டிகொடுக்க சொல்லி கேட்டபோது அவர் தட்டி கழித்து வந்தார்.மேலும் இது பற்றி கேட்டபோது அவர் என்னை தாக்கி உள்ளார். நான் வீட்டை விட்டு வெளியேறுவது மரியாதை ஆகும்.

வீட்டில் கழிப்பறை என்பது சுகாதரம் மற்றும் கவுரம் ஆகும் என்று குறிப்பிட்டார்.எனக்கு என் பெற்றோர் ஆதரவு உள்ளது. கணவர் வீட்டில் கழிப்பறை கட்டும் வரை நான் அவர் வீட்டுக்கு செல்ல மாட்டேன் என்று கூறினார்.

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாதது அவமானமாக கருதுகிறேன். கழிப்பறை என்பது ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியது. என்னுடைய மைத்துனி மற்றும் மாமியார் காலை கடனை கழிப்பதற்காக இருட்டில் திறந்தவெளியில் செல்லவது மிகவும் கஷ்டமாக உள்ளது என்று கூறினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை