siruppiddy

ஞாயிறு, 9 நவம்பர், 2014

சிறுநீரை மாற்றி கொடுத்து மாட்டிய பஸ் டிரைவர்!

  எகிப்து நாட்டில் விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தபடி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். அதில் ஒருவர் மட்டும் தனது போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார். அந்த பஸ் டிரைவரின் மனைவி 2 மாத கர்ப்பமாக உள்ளதால்,
 அந்த சிறுநீர் பரிசோதனையில் பஸ் டிரைவர் கர்ப்பம் என தெரிய வந்தது. விசாரணையில் சிறுநீர் உங்களுடையது தானா என அதிகாரிகள் கேட்க, பிரச்சினையில் இருந்து தப்பிக்க அந்த டிரைவர் ஆமாம் என்று கூறியுள்ளார். அதிகாரி சிரிப்பை கட்டுப்படுத்தமுடியாமல் கை குலுக்கி ‘நீங்கள் கர்ப்பம் அடைந்து உள்ளீர்கள், எனது வாழ்த்துக்கள்’ என கூறி சென்றுவிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை