siruppiddy

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கிடையில் கை கைலப்பு: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர்களுக்கிடையிலான கை கைலப்பில் ஒருவர் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தெடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலை ஆசிரியர்கள் இருவர், பாடசாலை விட்டு வெளியிடத்தில் மது அருந்திய வேளை வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இடம்பெற்ற கைகலப்பின்போது, ஆசிரியர் ஒருவர் மற்றைய ஆசிரியரின் தலையில் போத்தலால் அடித்துள்ளார். இதன்போதே அவர் பலத்த காயத்திற்குள்ளானதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் பாடசாலை சமூகம் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை