siruppiddy

புதன், 3 செப்டம்பர், 2014

கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் நேற்று நிகழ்ந்தது.
விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
எனினும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தின் இடது இறக்கையில் பிரச்சினை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அது திருத்தப்பட்ட நிலையில் விமானம் 10 மணித்தியாலம் தாமதமாக பேர்த்தை சென்றடைந்தது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை