siruppiddy

செவ்வாய், 22 அக்டோபர், 2013

இரசாயன வாயு கசிவு: 70 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்


பிலியந்தலை பகுதியில் தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியான இரசாயன வாயுவின் காரணமாக தொழிற்சாலைக்கு அருகில் வசித்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் களுபோவில பிலியந்தலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பிலியந்தலை பொலிஸார் விசாரணைகள் நிறைபெறும் வரையில் குறித்த தொழிற்சாலை மூடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை