siruppiddy

புதன், 9 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம்பெண்


தாய்லாந்தில் சுற்றுலா பயணிகளை வசியம் செய்த இளம் பெண் ஒருவரால் பேராபத்து நேர்ந்துள்ளது.

தாய்லாந்தின் சுற்றுலா தலமான பட்டாயா பகுதிக்கு, கார்த்திகேயன் கிருஷ்ணன்(வயது 36) மற்றும் காதர் பாட்சா(வயது 40) ஆகியோர் சென்றனர்.
அப்போது தாய்லாந்து பெண் ஒருவர் அவர்களை அணுகி பணம் கொடுத்தால் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு விலையை நிர்ணயித்த பிறகு கார்த்திகேயன், பாஷா ஆகியோரை அப்பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அதற்குள் ஏறுமாறு தெரிவித்துள்ளார்.

அவர்கள் காரில் ஏறியவுடன் அவர்களை சற்றுநேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு அப்பெண் தனது நண்பரை அழைத்துள்ளார்.
அப்போது தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்கள் வந்து கார்த்திகேயன் மற்றும் பாஷாவை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்களிடமிருந்து தப்பி வந்த கிருஷ்ணன், பாஷாவை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் பெண் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை