siruppiddy

சனி, 5 அக்டோபர், 2013

அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிள்விபத்து


மோட்டார் சைக்கிளினை டிப்பர் வாகனம் மோதியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சாவகச்சேரி, கொரடாவில் பிரதேசத்தைச் சேர்ந்த யோ.கஜந்தன் என்ற மாணவன் உயிரிழந்துள்ளார்.இவர் யாழ். பல்கலைக்கழகத்தின்

கலைப்பீடத்தில் வரலாற்றுத்துறை இறுதியாண்டு மாணவனாவார். குறித்த மாணவன் புத்தூரிலிருந்து கெருடாவில் நோக்கி மோட்டார் வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது பின் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்து. இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான

மாணவனை அச்சுவேலி வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசலையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சைபயனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவனது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை