siruppiddy

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கட்டுப்பாட்டு விலைஆங்கில மருந்து வகைகளுக்கு

                           
 
ஆங்கில மருந்து வகைகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலையை அமுலுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மருந்து வகைகளை நிர்ணயிக்கும் வகையில் பரிந்துரைகளை வழங்க ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்றை அமைக்கும் படி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இக்குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இரசாயன சேவைகள் பிரதிப்பணிப்பாளர், சுகாதார வழங்கல் பிரிவின் இயக்குநர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைத் தலைவர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை