கொடிகாமத்திலிருந்து புன்னாலைக்கட்டுவனுக்கு ஆமை ஒன்றைக் கடத்திச் சென்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொடிகாமத்திலிருந்து ஆமை ஒன்றுடன் சென்ற புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த நால்வரை சாவகச்சேரி பொலிஸார் கனகன்புளியடிச் சந்தியில் நடத்திய சோதனையின்போது கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.விசாரணைகளை மேற்கொண்ட சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி, சந்தேக நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். குறித்த ஆமையை ஆற்றில் விடுமாறும் உத்தரவிட்டார் - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=3061#sthash.XEmSBzPQ.dpuf
0 கருத்துகள்:
கருத்துரையிடுக