siruppiddy

வியாழன், 7 நவம்பர், 2013

சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்:


 
சிறுமிவிளையாடிக் கொண்டிருந்த போது நடந்த விபரீதம்: 
இங்கிலாந்தில் வளர்ப்பு நாயோடு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காம் அருகே மவுண்ட்சோரல் பகுதியில் உள்ள லெய்ஸ்டர்ஷயர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோடி ஹட்சன்(வயது 30).
இவரது மகள் லெக்சி ஹட்சன்(வயது 4), மிகப் பெரிய நாயோடு விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவளது கையில் சொக்லேட்டை வைத்து தின்று கொண்டே விளையாடினாள்.

இந்நிலையில் அவளது கையில் இருந்த சொக்லேட்டை பறிக்க நாய் பாய்ந்தது.
இதனை அறியாத லெக்சி, நாயோடு சண்டையிடவே கோபத்தில் பயங்கரமாக குரைத்தபடி பாய்ந்து கடித்து குதறியது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், பார்த்து அலறி கூச்சல் போட்டனர்.
விரைந்து வந்த ஜோடி ஹட்சன், குழந்தையை கடித்த நாயை அடித்தே கொன்றார்.

உடனடியாக லெக்சியை மீட்டு நாட்டிங்காமில் உள்ள குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி லெக்சி உயிரிழந்தாள்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை