பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி இன்று காலை சென்ற பஸ்சில் பயணித்தவர் ஒருவர் பஸ்சிலேய மரணித்துள்ளார்.
பொகவந்தாலவை இராணிகாடு தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய வீரன் அங்கமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி கல்வி பயிலும் தனது மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை கொண்டு செல்லும் வழியிலேயே இவர் மரணித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இவரின் சடலம் தற்போது பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்;கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக