siruppiddy

புதன், 18 டிசம்பர், 2013

கதவை உடைத்துக்கொண்டு உட்புகுந்த இருவர் கைது


மஸ்கெலியா வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு உட்புகுந்ததாகக் கூறப்படும் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மஸ்கெலியா கிலன்டில் மத்திய பிரிவு தோட்டத்தைச்  சேர்ந்த ஒருவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிகிச்சை பெற்றுவரும் இவரைப்  பார்வையிடுவதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 07 மணியளவில்  வைத்தியசாலைக்கு சென்ற மேற்படி இருவரும் நோயாளியை பார்வையிடுவதற்கு  அனுமதி கோரியுள்ளனர்.  இதன்போது நோயாளியைப் பார்வையிடுவதற்குரிய அனுமதி  மேற்படி இருவருக்கும் வழங்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் அலுவலக உத்தியோகத்தர்களுடன் வாய்த்தர்க்கத்தில் மேற்படி இருவரும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே  வைத்தியசாலையின் பின்புறக் கதவையும் கண்ணாடிகளையும் உடைத்துக்கொண்டு மேற்படி இருவரும் வைத்தியசாலையினுள் உட்புகுந்துள்ளனர்.

இவ்வாறு உட்புகுந்த இருவரையே மஸ்கெலியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேற்படி இருவரையும் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை