siruppiddy

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

அனுராதபுரம் -கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிப்பாவ பகுதியில் மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு (26) 10 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

மின் சார சபைக்கு சொந்தமான மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்த நிலையில் அவரின் வீட்டுக்கு செல்ல முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான கஹட்டகஸ்திகிலிய -கிரிப்பாவ எஸ்.தௌபீக் (வயது 43) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.நீதவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

மரணம் தொடர்பான விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை