siruppiddy

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஓமந்தைப் பொலிசாரால் லொறியுடன் 104 ஆடுகள் மீட்பு

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் கடமையில் நின்ற பொலிசார் யாழில் இருந்து வந்த லொறி ஒன்றினை மறித்து சோதனை செய்த போது அதில் 104 ஆடுகள் உரிய முறையில் அனுமதிகள் பெறப்படாது, முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பகுதியில் விலைக்கு கொள்வனவு செய்த ஆடுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வதாக அவ் லொறியில் பயணித்த மூவரும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உரிய அனுமதி பெறப்படாமை, முறையற்ற விதத்தில் ஆடுகளை கொண்டு சென்றமை தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டதுடன் ஆடுகளும் மீட்கப்பட்டது.கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை