siruppiddy

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

மீண்டும்மொரு பெண் கஹவத்தையில் கொலை?

கஹவத்த கொடகெதெனிய பிரதேசத்தில் உள்ள சுது பாலத்திற்கு அருகில் தோட்டத்தில் பணிபுரியும் 48 வயதான 02 பிள்ளைகளின்  தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இக் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இரகசிய பொஸீஸ் பிரிவு அங்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  கூறியுள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

அனுராதபுரம் -கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிப்பாவ பகுதியில் மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை நேற்றிரவு (26) 10 மணியளவில் உயிரிழந்துள்ளதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர். மின் சார சபைக்கு சொந்தமான மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்த நிலையில் அவரின் வீட்டுக்கு செல்ல முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான கஹட்டகஸ்திகிலிய...

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ரவுடிக் கும்பல்களை அடக்க விசேட அதிரடிப்படை நடவடிக்கை

திமன்றத்துக்கு சவால்விடும் சுன்னாகம் ரவுடிக் கும்பல்களை அடக்க உடனடியாக விசேட அதிரடிப்படையை அமர்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார். ரவுடித்தனத்தில் ஈடுபடும் அனை வரையும் பொலிஸ் விசேட அதிரப்படை யைப் பாவித்து கைது செய்து நீதிமன் றில் ஆஜராக்குமாறு வட பிராந்திய சிரே ஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றங்கள்...

வியாழன், 17 செப்டம்பர், 2015

ஓமந்தைப் பொலிசாரால் லொறியுடன் 104 ஆடுகள் மீட்பு

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் கடமையில் நின்ற பொலிசார் யாழில் இருந்து வந்த லொறி ஒன்றினை மறித்து சோதனை செய்த போது அதில் 104 ஆடுகள் உரிய முறையில் அனுமதிகள் பெறப்படாது, முறையற்ற வகையில் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பகுதியில் விலைக்கு கொள்வனவு செய்த ஆடுகளை புத்தளத்திற்கு கொண்டு செல்வதாக அவ் லொறியில் பயணித்த மூவரும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரிய அனுமதி பெறப்படாமை, முறையற்ற விதத்தில் ஆடுகளை கொண்டு சென்றமை தொடர்பில்...

திங்கள், 14 செப்டம்பர், 2015

சிறுமியின் கொலை தொடர்பில் விசேட சாட்சியங்கள்?

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமியின் கொலை தொடர்பில் பௌதீக தடயங்கள் உள்ளிட்ட விசேட சாட்சியங்களும் பயன்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கொட்டதெனியாவ சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட சிறுமியினது சடலம்...

ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

சடலமாக காலை காணாமல் போன சிறுமி மீட்கப்பட்டார்

கொட்டதெனிய, படல்கமவில் காணாமல் போன சிறுமி இன்று (13) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிமை இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இந்தச் சிறுமி மறுநாள் அதிகாலையில் காணாமல்  போயிருந்தார். 5 வயதான இந்தச் சிறுமியின் சடலம் திவுலப்பிட்டி அக்கரன்கஹ, ஜயசுமனாராம விகாரைக்கு அருகிலிருந்து இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

சனி, 12 செப்டம்பர், 2015

உறங்கிக்கொண்டிருந்த பிள்ளை யை காணவில்லை ?

கொட்டதெனியாவ, படல்கம பகுதியில் சிறு பிள்ளையொன்று காணாமற்போயுள்ளது. கொட்டதெனியாவ, படல்கம பகுதியைச் சேர்ந்த 4 வயதான பெண் பிள்ளையொன்றே காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது. இந்த பெண்பிள்ளை தனது பெற்றோருடன் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்தபோதே காணாமற்போயுள்ளது என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜயகொடி தெரிவிக்கின்றார். சிறுமி காணாமற்போனமை...

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

தொழிநுட்பக் கல்லூரிக் கிணற்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு.

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியின் கிணற்றிலிருந்து இன்று காலை 11.00 மணியளவில் வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் ரக வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று கிணற்றை இறைத்து சுத்தப்படுத்திய தொழிலாளர்களே மேற்படி குண்டை மீட்டுள்ளனர். இதுவரை காலமும் குறித்த கிணற்று நீரையே மாணவர்கள் குடி தண்ணீராக பருகி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

சனி, 5 செப்டம்பர், 2015

கொள்ளைக் கும்பல் அட்டகாசம் உதவிக்கு ஓடியவருக்கு வாள்வெட்டு

வாள்வெட்டில் காயமடைந்தவரின் சகோதரியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், குடும்பத்தில் உள்ள அனைவரையும் மிரட்டி 35 பவுண் நகை மற்றும் 40,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து செல்ல முற்பட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் அபாயக்குரல் எழுப்பவே, அங்கிருந்த நபர் தனது சகோதரியின் வீட்டுக்கு ஓடிச் சென்றுள்ளார். அங்கு நின்ற  கொள்ளையர்கள் ஓடிச்சென்றவர் மீது சரமாரியாக வாள்வெட்டை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை...

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

மூதாட்டிக்கு தலையில் முளைத்த கொம்பால் அவதி????

தென் மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசித்து வரும் லியாங் க்சியுஷென்(87) என்பவருக்கு தலையில் திடீரென கொம்பு முளைத்துள்ளதால் அவதிக்குள்ளாகி வருகிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தலையில் சிறிய கருப்பு கட்டி ஒன்று உருவானது. அப்போதைக்கு இந்தக் கட்டியை நாட்டு வைத்தியரிடம் காண்பித்து சரிசெய்து கொண்டுள்ளார். இந்தக் கட்டி இரண்டாண்டுகளுக்கு முன் திடீரென உடைந்தது. இது தலையின் மீது சிறு விரல் அளவிளான கொம்பாக வளர்ந்தது. இதையடுத்து,...

நவற்கிரி காலநிலை