siruppiddy

சனி, 7 நவம்பர், 2015

தாழமுக்கம் இலங்கைக்கு அருகில் சூறாவளி எச்சரிக்கை!!!

நாட்டின் பல இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் 
தெரிவிக்கிறது.
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றமுக்க நில ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை 
பெய்யக் கூடும்.
இதன்போது கிழக்கு கரையோர பகுதியில் பலமான காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கிழக்கு கடலிலிருந்து (திருகோணமலையிலிருந்து) 500 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காற்றமுக்க நிலை வலுவடையும் நிலை ஏற்பட்டால் கிழக்கு கடலில் சூறாவளி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை