siruppiddy

திங்கள், 30 நவம்பர், 2015

நாடக நடிகையின் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

இலங்கை தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகையான சனோஜா பிபிலையின் கையடக்கத் தொலைபேசி, பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்3.5 மில்லியன் மதிப்புள்ள நகைகளும், மற்றும் 32,000 ரூபா பணமும் உள்ளடக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை அவருடைய காரில் இருந்தே, இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கால்துறையினர்
 தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் மாலை, காலம்சென்ற தமித சலுவதனவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வருகை தந்த சந்தர்ப்பத்தில்,மரண வீட்டிற்கு பக்கத்தில் தனது காரை நிறுத்தி வைத்த வேளையில், இக்கொள்ளை சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
திருடர்கள் காரின் கண்ணாடியினை உடைத்தே இக்கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,பிலியந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை