siruppiddy

திங்கள், 16 நவம்பர், 2015

கண்டியில் போதைப் பொருள் விற்பனை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை!

போதைப் பொருள் விற்பனை செய்த பெண் ஒருவருக்கு கண்டி உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நாள் தோறும் ஹெரோயின் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு அடிமையாகிய கணவர் மற்றும் தந்தைக்கும் ஹெரோயின் போதைப் பொருள் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தப் பெண் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் போதைப் பொருள் வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பெண் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி சுதுஹ_ம்பொல என்னும் இடத்தில் வதியும் சந்திரலேகா குமாரி பெரேரா என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.
கண்டி உயர் நீதிமன்ற நீதவான் மேனகா விஜேசுந்தர இன்று இந்த தண்டனையை விதித்துள்ளார்.
2014ம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி இந்தப் பெண் கைது 
செய்யப்பட்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை