siruppiddy

செவ்வாய், 13 அக்டோபர், 2015

போக்குவரத்து அமைச்சின் அதிரடி தீர்மானம் ???

அனுமதிப் பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பஸ்களின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதத்தை அதிகரிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இந்த அபராதத் தொகையை ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கான சட்டங்களை வகுப்பதற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கு தற்போது 10,000 ரூபா வரை அபராதம் 
விதிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை