siruppiddy

வெள்ளி, 13 நவம்பர், 2015

குரங்காக யாழில் மாறிய இரு இளைஞர்கள்

யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு அண்மையில் வீதியில் நடந்து சென்றவரை வழிமறித்த இருவர், அவரிடம் தீப்பெட்டி கேட்டபின்னர், அவரை கத்தியால் கீறி, கன்னத்தில் கடித்த சம்பவம் தீபாவளி தினத்தன்று நடைபெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஐயாத்துரை ராஜசேகரம் (43) என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

17 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இருவரே இவ்வாறு செய்துள்ளனர்.

இந்த இருவரும், அப்பகுதியிலுள்ள காணிகளின் வேலிகளை பிடுங்கி அட்டகாசம் செய்த வண்ணம் வீதியில் நின்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2015

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்கினிய  வாசகர்கள், அன்பு உறவுகளுக்கும் அனைவருக்கும் என் இன்ப தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
எம் தாய் நாட்டிலும் உலகெங்கிலும் பரந்து வாழும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எனது  வலையமைப்பின் சார்பில் 
 இனிய தீப ஓளித் திருநாள்
 நல்வாழ்த்துக்கள்.
இருட்டை கிழித்து பிறக்கட்டும் புது வழி… மத்தாப்பு புன்னகையில் கரையட்டும் கண்ணீர் துளி… விடியும் பொழுது ஒளிர- ஏற்று தீப ஒளி… முடியும் என்ற திண்ணம் கொண்டு துவங்கட்டும் 
தீபாவளி
ஏற்றமிகு வாழ்வு அமையப்பெற்று அனைவரும் வாழ்வின் அனைத்து வறுமைகளும் நீங்கி நிறைவான செல்வத்துடன், நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ இத்தீபத் திருநாளில் எனது இனிய நல்வாழ்த்துக்களுடன்  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்  இணையங்களும்  வாழ்த்துகின்றது 
வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் கணேஷ் தம்பையா

லண்டனில் அரியாலை மன்றத்தினரால் மதிப்பளிக்கப் படுகிறார் திரு. கணேஷ் தம்பையா தன் சிறுவயதில் இருந்து வில்லிசை வித்தகனாய் எங்கள் தாயகத்தில் பட்டி, தொட்டி எங்கும் வலம் வந்த ஓர் கலைஞர்.
 இலங்கை வான்ஒலி, 
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அன்றே வரவேற்பு பெற்ற ஓர் அற்புதமான கலைஞர். அன்று முதல் இன்றுவரை மிளிரும் கலைஞர். “நையாண்டி மேளம்” எனு‌ம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்.(ஒரு மரத்தில் பூவும், காயும், கனியும்,கலகலப்பாய் வெளியே தெரியும் வேர்
 தெரிவதில்லை
அப்படி நடித்தவர்கள் உலக வலம் வர தன்னை மறந்து மகிழும் மனிதர். பல படைப்புகள், படைப்பாளிகள் உருவாகக் காரணமானவர்திரு. கணேஷ் தம்பையா இன்று லண்டனில் அரியாலை திடிர் நாடக மன்றத்தினரால் மதிப்பளிக்கப் பட்டதற்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்   வாழ்க வளமுடன் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 7 நவம்பர், 2015

தாழமுக்கம் இலங்கைக்கு அருகில் சூறாவளி எச்சரிக்கை!!!

நாட்டின் பல இடங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டில் பரவலாக கடும் மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் 
தெரிவிக்கிறது.
இலங்கைக்கு தென்கிழக்கே காற்றமுக்க நில ஏற்பட்டுள்ளதால் குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு கூடிய மழை வீழ்ச்சி ஏற்படுவதுடன் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் 100 மி.மீ. அளவு மழை 
பெய்யக் கூடும்.
இதன்போது கிழக்கு கரையோர பகுதியில் பலமான காற்று வீசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையின் கிழக்கு கடலிலிருந்து (திருகோணமலையிலிருந்து) 500 கிலோமீற்றர் தொலைவில் தாழமுக்கம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காற்றமுக்க நிலை வலுவடையும் நிலை ஏற்பட்டால் கிழக்கு கடலில் சூறாவளி ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 5 நவம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்.05.11.15

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் 
( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன்(மோகன் )தனது 
 பிறந்த நாளை. 05.11.201515.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும்  மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி ...கோப்பாய் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  கோப்பாய் வெள்ளருவப்பிள்ளையார் இறைஅருள் பெற்று    
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு 
சீரும் சிறப்புடன் சகல வளம் பொங்க! பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ  வாழ்த்துகிறனர்  
 இவர்களுடன் நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

புகையிரதங்களில் இன்று முதல் பிச்சை எடுக்க தடை?

ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பவர்களை நாளை (01) முதல் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதன் பிரகாரம் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சை எடுப்பதற்கு நாளை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸார், ரயில்வே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை ஈடுபடுத்தி நாளை முதல் ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் இருந்து பிச்சைக்காரர்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் பிச்சைக்காரர்களால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் 
மேலும் கூறினார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஆப்பிள் ஃபோனை பேஸ்புக் ஊழியர்கள் பயன்படுத்த தடை

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பிரிவில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் ஆப்பிள் போனை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏதோ பேஸ்புக்கிற்கும் ஆப்பிளுக்கும் சண்டை என்று நினைத்துவிட வேண்டாம். பேஸ்புக்கை பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ராய்ட் போன்களைத்தான். ஆனால், பேஸ்புக்கில் பணிபுரிபவர்கள் பயன்படுத்துவது ஆப்பிள் போன்களை தான். எனவே, அவர்களுக்கு ஆண்ராய்ட் போன்களை பயன்படுத்துபவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொள்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தலைமை செயல் அதிகாரி கிறிஸ் காக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து கிறிஸ் காக்ஸ் தெரிவிக்கையில், “இங்கு வேலை செய்பவர்களில் பெரும்பாலனவர்கள் ஆப்பிள் போன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே எங்கள் அணியில் இருக்கும் அனைவரையும் ஆப்பிள் போன்களில் இருந்து ஆண்ராய்ட் போன்களுக்கு மாறும்படி கூறியுள்ளேன். இதன் மூலம் பேஸ்புக் பயனாளர்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகளை அவர்களும் எதிர்கொள்ள நேரிடும்.” என்று
 தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நவற்கிரி காலநிலை