siruppiddy

வியாழன், 7 ஏப்ரல், 2016

அனைத்து மருந்துத் தட்டுப்பாட்டுக்கு 2017 இல் முற்றுப் புள்ளி!

எதிர் வரும் 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான மருந்துகளை பிரச்சினையின்றி வழங்க புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன 
குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும் 2017ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகளில் 90 வீமானவற்றை விரைவாக பெற்றுக் கொடுக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை