siruppiddy

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

மீண்டு தாய்மொழியை மறந்த இளைஞர் (காணொளி இணைப்பு)

 அவுஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் ஒருவாரமாக கோமாவில் இருந்து மீண்ட பிறகு தனது தாய் மொழியை மறந்து விட்டு சீன மொழியில் பேசுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த மெக்மேகன் (Ben McMahon- age 22) என்ற நபர் பயங்கரமான கார் விபத்து ஏற்பட்டதால் கோமா நிலைக்கு சென்றுள்ளார். ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மெக்மேகன் கோமாவில் இருந்து மீண்டு எழுந்த போது அருகில் இருந்த செவிலியரை பார்த்து சீன மொழியில் பேசியுள்ளார்.
பின்னர் செவிலியரிடம் ஒரு காகிதம் மற்றும் பேனா கேட்டு வாங்கி சீன மொழியில், தனது தாய் மற்றும் தந்தை மீது மிகுந்த அன்புள்ளதாகவும், தான் உடல் நலம் தேறிவிட்டதாகவும் எழுதி காட்டியுள்ளார்.
இவரின் புது மொழி திறனை கண்டு குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் வியந்துள்ளனர்.
மேலும் மெக்கேனுக்கு தனது தாய் மொழியை நினைவுபடுத்த மூன்று தினங்கள் ஆகியுள்ளது. இவர் தனது பள்ளிக்கூடத்தில் சீன மொழி படித்து வந்தாலும், அதில் சரளமாக பேசக்கூடிய திறமை இல்லாதவர் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் இவரின் பேச்சு திறனைக்கண்டு இவருக்கு சீன தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய அழைப்பு வந்துள்ளது. மேலும் இவர் சீனாவிற்கு சென்று தனது பட்டப்படிப்பை தொடர உள்ளார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

 

புதன், 3 செப்டம்பர், 2014

கட்டார் விமானம் அவசரமாக தரையிறக்கம்

 டோகாவுக்கும் அவுஸ்திரேலிய பேர்த் நகருக்கும் இடையில் பயணித்துக் கொண்டிருந்த கட்டார் எயார்வேய்ஸ் விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் எரிபொருள் ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டமையை அடுத்தே இந்த அவரச தரையிறக்கம் நேற்று நிகழ்ந்தது.
விமானத்தின் ஒரு இயந்திரத்தில் ஒழுக்கு ஏற்பட்டதாக விமானி சந்தேகம் வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் சுமார் 30 நிமிடங்களில் குறித்த விமானம் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டது.
எனினும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தின் இடது இறக்கையில் பிரச்சினை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அது திருத்தப்பட்ட நிலையில் விமானம் 10 மணித்தியாலம் தாமதமாக பேர்த்தை சென்றடைந்தது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தாயை விலைபேசிய வாலிபர் ஒருவர்

சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாயை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.
சீனாவின் குயாங்கான் (Guanghan) என்ற பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இணையதளத்தில் தான் ஒரு பெண்ணை தாயாக தத்தெடுக்க விரும்புவதாக நிபந்தனைகளுடன் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் இவர் விதித்த 4 நிபந்தனைகள்
•அந்த பெண் 57 வயது இருக்க வேண்டும்
•அவருக்கு நல்ல கல்வி அறிவு இருக்க வேண்டும்.
•போதை பொருள் பயன்படுத்துபவராக இருக்க கூடாது
•வெளிநாடுகளில் பயணம் செய்த அனுபவம் இருக்க வேண்டும்
இந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப எனக்கு தாயாக இருந்தால் அவருக்கு ரூ. 1 கோடி பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
விளம்பரத்தின் அருகே பெரிய சிவப்பு விளக்கை பிடித்தபடி அவர் நிற்கும் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது கையெழுத்து, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு!

    நாசா எச்சரிக்கை!!. சூரியனில் மிக வீரியமான பிழம்புகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அந்தச் சூரியப் பிழம்புகளால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று பிரபல விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனில் எப்போதும் நடுக்கம் இருந்துகொண்டே இருக்கும். அப்போது அதிலிருந்து நெருப்புக் கோளங்கள் தோன்றும். இந்தச் சூரிய நடுக்கம் ஒவ்வொரு 11 ஆண்டு களுக்கும் உச்சத்தை அடையும். அப்போது அதன் பிழம்புகள் மிக வீரியத்துடன் இருக்கும். வெளிப்படும் சில நெருப்புப் பிழம்புகளின் அளவு பூமியின் அளவைப் போன்று 14 மடங்கு அதிகமாக இருக்கும். அதிலிருந்து கதிரியக்கமும் ஏற்படும்.
   இந்தச் சூரிய நடுக்கம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள விண்வெளி மையமான நாசா தன்னிடம் உள்ள 'சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி அண்ட் சோலார் ஹீலோஸ்பெரிக் அப்சர்வேட்டரி' எனும் கண்காணிப்புக் கருவி மூலம் சூரிய நடுக்கத்தை ஆராய்ந்து உறுதி செய்துள்ளது. இதுபற்றி நாசாவின் செய்தித் தொடர்பாளர் கேரன் ஃபோக்ஸ் கூறும்போது, "இந்தச் சூரியப் பிழம்பு கள் பூமியில் உள்ள ஜி.பி.எஸ். மற்றும் இதர தொலைதொடர்பு சிக்னல்களைப் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
நாளடைவில் சூரியப் பிழம்புகள் குறைந்துகொண்டே வந்தாலும் கூட சூரிய நடுக்கம் அதன் குறைந்தபட்ச அளவை அடையும்வரை இந்த‌ப் பிழம்புகளின் தாக்கம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் மனிதர்களுக்கோ, பூமியில் உள்ள பிற உயிரினங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் தன் தரை, கடல் மற்றும் வான்வழி தொலைதொடர்பு சாதனங்க ளை எல்லாம் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

புதன், 27 ஆகஸ்ட், 2014

தோப்பு அச்சுவேலி கைத்தொழில் போட்டை திறப்பு!


                  இந்திய மற்றும் சிறீலங்கா அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ச இன்று திறந்துவைத்துள்ளார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அதிகார சபையின் ஏற்பாட்டில் அச்சுவேலியில் மீள்புனரமைப்பு செய்யப்பட்ட இந்தக் கைத்தொழில் பேட்டையில் 22 காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி , பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராசா உட்பட மற்றும் பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

64 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தக் கைத்தொழில் பேட்டையின் மீள் நிர்மாணப் பணிகளுக்காக இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் சிறீலங்கா அரசு 50 மில்லியன் ரூபா நிதியுதவியையும் வழங்கியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள்

திங்கள், 28 ஜூலை, 2014

தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில்


ஈழத்துச் சிறுமியின் தாய் மண்ணின் பாடலால் கண்ணீரில் நனைந்த அரங்கம்

மற்றைய செய்திகள்


 

செவ்வாய், 15 ஜூலை, 2014

நண்பனை கசூரினாக் கடலில்அமிழ்த்திக் கொல்ல முயன்ற இருவர் கைது!

 
காரைநகர் கசூரினாக் கடலில் நண்பனை நீரில் அமிழ்த்தி கொலை செய்ய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கடலினுள் அமிழ்த்தப்பட்ட நபர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
   கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் அடங்கிய நண்பர் குழுவொன்று, கசூரினாக் கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். இதன்போதே, இவர்களில் நால்வர் இணைந்து, மற்றைய நபரைத் தூக்கிச் சென்று கடலினுள் அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அவதானித்துள்ள, கடலில் ஆபத்தில் சிக்குபவர்களைக் காப்பாற்றும் பணியாளர்கள், குறித்த நபரைக் காப்பாற்றி கரை சேர்த்ததுடன், இதுகுறித்து அங்கு கடமையில் நின்ற பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்படி நால்வரும் தப்பித்து ஓட முயன்ற போதும், அவர்களில் இருவர் பொதுமக்களால் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
மற்றைய செய்திகள்

நவற்கிரி காலநிலை