siruppiddy

செவ்வாய், 14 ஜூலை, 2015

இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்

மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிய இளைஞன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞனே கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கத்திக் குத்தில் உயிரிழந்த இளைஞனும் அவரது நண்பரும் சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,  இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் ஒளியை செலுத்திப் பார்த்தபோது, வீதியோரத்தில் இளைஞர்கள் சிலர் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கும் மது அருந்திய இளைஞர் குழுவுக்குமிடையில் கைகலப்பு  ஏற்பட்டுள்ளது.
இதன்போது, செல்லத்துரை தயாளன் கத்திக் குத்துக்கு உள்ளாகி, அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சைக்கு பலனின்றி மரணமடைந்தார்.
இதேவேளை, இந்தக் கைகலப்பின்போது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, தற்போது பொலிஸ் பாதுகாப்பில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை