siruppiddy

வியாழன், 18 ஜூன், 2015

இதுவரை இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் காரணமாக 24 பேர் பலி

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் இன்புளுவென்சா எச்.1 என்1 வைரஸ் காரணமாக இதுவரை 24 பேர் பலியாகியுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் எனவும் இது தாய், சேய் மரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.
காய்ச்சலுக்கான நோய் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சகல கர்ப்பிணி தாய்மாருக்கும் எச்.1என்1 எதிர்க்கும் வைரஸ் மருந்துகள் வழங்கப்படுகின்றனர்.
இதனை வைத்தியசாலையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை