siruppiddy

சனி, 13 ஜூன், 2015

மீண்டும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை மீண்டும் !

வெளிநா­டு­களில் புலம்­பெ­யர்ந்­துள்ள இலங்­கை­யர்கள் அனை­வரும் மீளவும் நாட்­டிற்கு வருகை தர­வேண்டும். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்­க­ள­வர்கள் என்ற பேதம் பாராமல் அனை­வரும் புலம்­பெ­யர்ந்த இலங்­கையர் என்ற வகையில் நாட்டின் ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்று வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அழைப்பு
 விடுத்துள்ளார்.
கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வெளிவி­வ­கார அமைச்சில் நேற்று புலம்­பெ­யர்ந்த 150 இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்ட பின்னர் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு
 தெரி­வித்தார்.
அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்- ‘உல­க­ளா­விய ரீதியல் புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் இலட்­சக்­க­ணக்­கானோர் வசித்து வரு­கின்­றனர். எனினும் எமது நாட்டில் 1987 ஆம் ஆண்­ட­ள­வி­லேயே இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் அறி­முகம் செய்­து­வைக்­கப்­பட்­டது. இதன்­படி குறித்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வ­ரையில் சுமார் 34 ஆயிரம் பேரிற்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டுள்­ளது.
இது­வ­ரைக்கும் 2000 விண்­ணப்­பங்கள் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு 
கிடைக்­கப்­பெற்­றாலும் புதிய ஒழுங்­கு­மு­றைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் முதலில் விண்ணம் செய்த 450 பேரிற்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் இரண்டாம் கட்டம் என்ற வகையில் நேற்று 150 பேரிற்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது.
இதன்­பி­ர­காரம் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை தொடர்ந்தும் வழங்­கப்­பட்டு வந்த போதிலும் 2011 ஆம் ஆண்­ட­ளவில் முன்­னைய ஆட்­சியின் போது
 இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை இடை­நி­றுத்­தப்­பட்­டது. எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஆட்­சியின் போது மீளவும் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கும் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ளது. அத்­தோடு திட்­ட­மிட்ட சில­ருக்கு மாத்­தி­ரமே இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மையை முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் வழங்­கினர்.
ஆனால் தற்­போது புலம்­பெ­யந்­தோ­ருக்­கான கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. எனவே வௌிநா­டு­க­ளி­லுள்ள புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் மீளவும் இலங்­கைக்கு வருகை தர­வேண்டும். நாட்டின் இன ஐக்­கி­யத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இன பேதம் பாராமல் புலம்பெயர்ந்த இலங்கை என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்த தருணத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அதேபோன்று புலம்பெயர்ந்தவர் தமது திறமைகளை இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும்’ என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை