siruppiddy

புதன், 6 மே, 2015

மாணவி சுலக்ஷினி தேசிய மட்டத்தில் முதலிடம்

மட்டக்களப்பை சேர்ந்த செல்வி புவனேந்திரராஜா சுலக்சனி தேசிய இலக்கிய விழாவில் முதல்ப்பரிசை பெற்று சாதித்துள்ளார். ஆரையம்பதி இராமகிருஸ்ண மிஷன் மகா வித்தியாலயத்தில் தரம் – 09 இல் பயிலும் இந்த மாணவி, தேசிய இலக்கிய விழாவின் கனிஸ்ட பிரிவிற்கான கவிதைப் போட்டியிலேயே முதல்ப்பரிசை பெற்றுள்ளார்.

கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் – 2015 தழிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பிக்கும் முகமாக பாடசாலை மாணவர்களைக் கொண்டு பாடி வெளியிடப்பட்ட ‘அருணோதய – 2015 சிறுவர் பாடல்கள்’ இறுவட்டிலும் பாடல்களை தனியாகவும் குழுவாகவும் தமிழ் சிங்கள மாணவர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை