siruppiddy

வியாழன், 24 நவம்பர், 2016

பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மினுவாங்கொடை, பீலாவத்தை பிரதேசத்திலுள்ள “பிக் சிற்றி” எனும் வீட்டுத்திட்டத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளே துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு 
தப்பிச்சென்றுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 22 நவம்பர், 2016

எட்டு கால்கள். ஒரு தலை. இரண்டு உடல். அதி­சய ஆட்­டுக்­குட்டிபிறந்தது !

திருநெல்­வேலி:
கலி­யா­வூரில் ஒரு தலை.. 2 உடல்.. 8 கால்­க­ளுடன் பிறந்த அதி­சய செம்­மறி ஆட்டுக் குட்டி பிறந்த சில நிமி­டங்­களில் இறந்­தது.
தூத்­துக்­குடி மாவட்டம், வல்ல­நாடு அடுத்த கலி­யா­வூரை சேர்ந்­தவர் பழனி, விவ­சாயி. இவர் செம்­மறி ஆடு­களை வளர்த்து வரு­கிறார். இதில் ஒரு செம்­மறி ஆடு குட்­டியை பிர­ச­விக்க முடி­யாமல் திண­றி­யது. இத­னை­ய­றிந்­த பழனி, செம்­மறி ஆட்டை பாளை.யை அடுத்த சீவ­லப்­பேரி கால்­நடை மருந்­த­கத்­திற்கு சிகிச்­சைக்கு கொண்டு சென்றார்.
அங்கு கால்­நடை உதவி டாக்டர் முருகன், கால்­நடை ஆய்­வாளர் மணி­கண்டன், பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் முத்­து­நா­யகம் ஆகியோர் கொண்ட மருத்­துவ குழு செம்­மறி ஆட்­டிற்கு சிகிச்சை அளித்­ததால், ஒரு தலை.. இரண்டு உடல்.. எட்டு கால்­க­ளுடன் கூடி குட்­டியை  வெ­ளியே எடுத்­தனர்.  தாய் ஆடு நல­முடன் உள்ள போதிலும், அதி­சய ஆட்­டுக்­குட்டி இறந்­தது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 18 நவம்பர், 2016

இனி இலங்கையில் அடிப்படைச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு 12, அல் ஹுஸைன் கல்லூரியில்,17.11.2016 நேற்றைய தினம் இடம்பெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம், இலங்கையின் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை
 முன்னெடுத்துள்ளது.
எமது புதிய கல்வி அபிவிருத்தித் திட்டங்களுக்கமைய, தற்போது நிலவும் கல்வித் திட்டத்திலும் பார்க்க உயர் நவீனத்துவம் கொண்ட கல்வித் திட்டமொன்று, எமது மாணவர் சமுதாயத்துக்குப் 
பெற்றுக்கொடுக்கப்படும்.
எமக்கு கிடைத்ததை விட சிறந்த எதிர்காலத்தை, எமது இளைஞர் சமுதாயத்துக்குப் பெற்றுக்கொடுப்பதே, எமது பிரதான இலக்காகும்.
தற்காலத்தில், அலைபேசிகள், ஐபாட் போன்ற தொழில்நுட்பக் கருவிகள், பயன்பாட்டில் உள்ள நிலையில், தொழில்நுட்பத்துடன் சேர்த்து, எமது பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்த வேண்டும். அதற்காக நாம், புதிய வேலைத்திட்டங்களை 
ஆரம்பிக்கவுள்ளோம்.
நல்ல நாடொன்றை உருவாக்க வேண்டுமாயின், பொருளாதாரமும் அரசியலமைப்பும் மாத்திரம் போதுமானதன்று. எதிர்கால சந்ததியினருக்கான நல்ல கல்வித் திட்டமொன்று, அந்த நாட்டில் காணப்பட
 வேண்டும்.
நம் நாட்டுக் கல்வித் திட்ட அபிவிருத்திக்காக, பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வோம் என்று குறிப்பிட்ட பிரதமர்,
குறைந்த சம்பளம் வழங்கும் பொருளாதாரத்திலிருந்து நாம் விலகிச் செல்ல வேண்டும். ஆகக் குறைந்த சம்பளம் 40 ஆயிரமாகக் காணப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அறிவு அதிகரிக்கும் அளவுக்கு, சம்பளமும் அதிகரிக்கப்படல் வேண்டும். கல்வித் துறையின் மாற்றம், அதனை இலக்காகக் கொண்டதாகவே அமைந்துள்ளது என்றார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 நவம்பர், 2016

இராட்சத முள்ளங்கி ஒன்று புதிதாக காய்த்துள்ளது!

மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.
விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு காய்த்துள்ளதாக தோட்ட உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த முள்ளங்கி சுமார் 3 கிலோ 800 கிராம் நிறைவுடையது என்பது குறிப்பிடதக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 27 அக்டோபர், 2016

யாழ் வலிகாம விவசாயிகள் கோவா செய்கையில் ஆர்வம் !

யாழ்.வலிகாமம் பகுதியில் மரக்கறிப் பயிர்ச்செய்கையான பெரும் போக கோவா செய்கையில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி
 வருகின்றனர்.
புன்னாலைக்கட்டுவன், ஈவினை, குப்பிளான், ஏழாலை, குரும்பசிட்டி, கட்டுவன், அச்செழு, ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி உள்ளிட்ட பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலப் பகுதியில் கோவா செய்கை பயிரிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட கோவா செய்கை இரண்டரை மாத காலத்தில் அறுவடை செய்யப்படவுள்ளது.
கோவா செய்கையின் அதிகரித்த விளைச்சல் காரணமாகக் கடந்த வருடம் தம்மால் அதிக இலாபம் பெற முடிந்ததாக வலிகாமம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 24 அக்டோபர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.16

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம் 
தம்பதிகளின்   செல்வப்புதல்வி அபிதா தனது 
பதின் நான்காவது   பிறந்த நாளை. 24.10.16.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்...
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று.
உன் அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே..,என வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து பல்லாண்டு பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 அக்டோபர், 2016

நீங்கள் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரா ? அதில் மறைந்திருக்கும் ரகசியம்!

பொதுவாக நம்மில் அதிகமானோர் பயன்படுத்தி வருவது ஹெட்செட். நாம் அனைவரும் அதன் மூலம் பாடல்கள் கேட்கிறோம், படங்கள் பார்க்கிறோம். ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து யாரும் பெரிதாக சிந்திப்பதில்லை.
பயணத்தின் போதோ, நடந்து செல்லும் போது, அது ஏன் தூங்குவதற்கு முன்னர் கூட பலர் ஹெட்செட்டில் பாடல் கேட்டு வரும் பழக்கம் தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் கேட்டால், ஹெட்செட் இல்லாமல் பாடல்களோ அல்லது படங்களோ பார்த்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக மாறிவிடும், அதன் காரணமாகவே ஹெட்செட் பயன்படுத்தவதாக பலர் தெரிவிக்கின்றனர்.
ஹெட்செட்டில் பாடல்கள் கேட்பது என்பது ஒரு பொழுது போக்கு என்பது மாறி, தற்போது அது ஒரு Style ஆக மாறியுள்ளது. ஆனால் அதில் இருக்கு பாதிப்புகளைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை, அது தெரிந்தால் ஹெட்செட் உபயோகிப்பதை சற்று யோசிப்பீர்கள்.
* தொடர்ந்து ஹெட்செட்டை பயன்படுத்திவந்தால் நமது காதில் ஜவ்வுகள் பாதிக்கக்கூடும். இதன் காரணமாக காது கேட்காத நிலை கூட ஏற்படும்.
* பொதுவாக 80-85 வரையிலான டெசிபலுக்கு மேற்பட்ட ஒலிகளை கேட்கும்போது நமது காதுகள் பலமாக பாதிக்கப்படுகின்றன.எனவே ஹெட்செட்களை குறைந்த ஒலி அளவுடன் பயன்படுத்துவது சிறந்தது.
* மேலும் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரமில்லாதவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம். மேலும் ஹெட்செட்டை தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். சிறிது நேரம் காதுகளுக்கு ஓய்வு அளித்துவிட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.
* அடுத்தது ஹெட்செட்களை சுத்தமாக வைத்துகொள்வது. நம்மில் பலரும் இதை செய்ய தவறி விடுகிறோம். அதன் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறோம்.
* அதேபோல் அடுத்தவர்களின் ஹெட்செட்களை நாமும் பயன்படுத்த கூடாது, நமக்கு சொந்தமானவற்றை மற்றவர்களுக்கு தரவும் கூடாது. இதன் மூலம் காதில் ஒருவருக்கு உள்ள நோய் மற்றவருக்கும் தொற்றிக்கொள்ளும்.
* ஹெட்செட்களில் இருந்து உற்பத்தியாகும்
 மின்காந்த அலைகள் தமது மூளையை நேரடியாக பாதிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது மட்டுமில்லாமல் ஹெட்செட்களை பயன்படுத்திகொண்டே சாலையில் செல்பவர்களால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
* எனவே வாகனம் ஓட்டும் போதோ சாலையில் நடந்துசெல்லும் போதோ ஹெட்செட்டை பயன்படுத்துவதை முற்றிலும் கைவிடவேண்டும்.
* முடிந்தளவு ஹெட்செட்டில் பாட்டு கேட்பதை தவிர்த்துவிட்டு இயற்கையின் ஓசையை கேட்க பழகிக்கொள்ளுங்கள். இதன் மூலம் செவிகளுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கு இனிமை 
ஏற்படக்கூடும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




நவற்கிரி காலநிலை