siruppiddy

புதன், 4 ஜூன், 2014

மட்டுவிலில் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுவிழா

.யாழ் மட்டுவில் மாதுமை மழலைகள் கல்விப் பூங்காவின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்புடன் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 02 மணி முதல் கல்விப்பூங்கா
 மைதானத்தில் இடம்பெற்றது.
இயக்குநர் சி.சிவகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்
 பா.கஜதீபனும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சி வலய முன்பள்ளி உதவிக்
 கல்விப் பணிப்பாளர் சு.பாக்கியராஜா மற்றும் மட்டுவில் தெற்கு அமெரிக்க
 மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை அதிபர் வே.சுந்தரலிங்கம் ஆகியோரும் கலந்து
 கொண்டனர்.
இவ் விழாவில் சிறார்களின் மெய்வன்மை நிகழ்ச்சிகளும் கலைநிகழ்வுகளும்
 நடைபெற்றன.
வெற்றி பெற்ற சிறார்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் பழையமாணவர்கள்,ஊரவர்கள்,பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
                         
 
 

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை