siruppiddy

வெள்ளி, 13 ஜூன், 2014

கூத்தாட்டம் போடும் மாணவர்கள்.

யாழ்ப்பாணம் மட்டுமல்ல உலகத்தின் எந்தவொரு பகுதியிலும் அதிக வருமானத்தை ஈட்டித் தரக் கூடியது மதுபானசாலை ஆகும். அந்தளவுக்கு மதுப் பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர்.

இந் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை நாளுக்கு நாள் அதிகரித்து, தமிழினத்தின் கல்வி கவலைக்கிடமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பெரியதொரு பதவியில் இருந்து கொண்டு, எங்களை கடைசிக் காலம் வரை காப்பாற்றுவார்கள் என கற்பனையில் மூழ்கியிருக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு பெரும் இடியாக விழுந்திருக்கின்றது.

கலாசாரமும் கல்வியும் தான் எமது மூலதனம். அந்தக் கலாசாரம் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில், கல்வியும் எம்மில் இருந்து விலகுவதானது எமது இனத்தின் அடையாளங்கள் அனைத்தும் அழிந்து விடும் அபாய நிலையை ஏற்படுத்தி விட்டுள்ளது.மதுபானசாலைகளில் அலைபோதும் மாணவர்களைக் காண்கின்றபோது எங்களை அறியாமலே கண்ணீரில் மிதக்கிறது கண்கள். இப்படியிருக்கும் போது அந்த மாணவர்களின் பெற்றோர்களின் நிலையை நினைக்கவே முடியாதுள்ளது.

இது இவ்வாறிருக்க, மதுவினை விற்று மாற்றான் குடும்பத்துக்கு அழிவை ஏற்படுத்தும் மதுபானசாலை உரிமையாளர்கள், தாங்களும் தாங்கள் சார்ந்தவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செல்வதை அவதானிக்காதவர்களாக, சிந்திக்காதவர்களாக உள்ளமை பெரும் கவலையளிக்கின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை