siruppiddy

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மலேசிய விமானம்: புது தகவலை வெளியிட்ட ரஷ்யா

மாயமான மலேசிய விமானம் குறித்து ரஷ்யா புது தகவலை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் திகதி மாயமான மர்மமான முறையில் மாயமானது.
பல்வேறு தேடுதல் வேட்டைக்குப் பின்னர் விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் இருந்தவர்கள் இறந்துவிட்டனர் என்றும் மலேசிய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து விமானம் கடலில் விழுந்த இடத்தை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இவ்விமானத்தை பயங்கரவாதிகள் பயணிகளுடன் கடத்தி, ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மறைவிடத்தில் வைத்திருப்பதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது
 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

வயிறுகளில் சுற்றி தங்கச் சங்கிலிகள் கடத்த முயற்சி..

இலங்கை தம்பதியரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கல்முனையைச் சேர்ந்த மேற்படி தம்பதியர், தங்களது 4 வயது மகன் மற்றும் 14 வயது குழந்தை ஆகியவற்றின் வயிறுகளில் தலா மும்மூன்று தங்கச் சங்கிலிகளை சுற்றி அவற்றை சென்னைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அத்துடன், அக்குழந்தைகளின் தாயான சந்தேகநபரும் தங்க வளையல்கள் பலவற்றை அணிந்துக்கொண்டு அவற்றை கடத்த முற்பட்டுள்ளார்.

இவர்களிடமிருந்து சுமார் 560 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்

அந்தியேட்டி அழைப்பிதழ்அமரர் திரு நடராசா அற்புதராசா

                          
 தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.07.04.2014.திங்கட்கிழமை அனைவரைவும் இதில்கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம் தகவல் மனைவி பிள்ளைகள்.. அன்னாரின் ஆத்மாசாந்தி அடய இறைவனைப்பிராத்திப்போமாக ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!

புதன், 5 மார்ச், 2014

ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவி


யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இதேவேளை, செப்டெம்பர் 14 திகதிக்கு முன்னர் காங்கேசன்துறைக்கும் யாழ்.தேவி புகையிரதம் செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ்.தேவி கடந்த 28 வருடங்களுக்கு பிறகு கொழும்பிலிருந்து பளை வரை தனது பயணத்தை செவ்வாய்க்கிழமை (4) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை

தெரிவித்தார். ‘கொழும்பு- பளை வரையான தனது பயணத்தை யாழ்தேவி இன்று (4) ஆரம்பித்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரத சேவையையும் யாழ்.தேவி ஆரம்பிக்கவுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவையானது எதிர்வரும் தினம் கொழும்;பிலிருந்து பளை வரை தனது சேவையினை மேற்கொள்ளும்’ என்றும் இதன்போது அவர் இதன்போது தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரது வேண்டுகோளுக்கமைய புகையிரத பாதைகளை குறுக்கறுத்துச் செல்லும் பாதைகளுக்கு பாதுகாப்பு கடவை அல்லது பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாகவே நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.. “இந்த புகையிரத சேவையானது கோட்டையிலிருந்து தினமும் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.28 மணிக்கு பளை சென்றடையும். மறுநாள் காலை பளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மதியம் கோட்டையை அடையும்” என புகையிரத திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 14 ஜனவரி, 2014

கடலில் தத்தளித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.
கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும், இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை கடற்பரப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிய படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவர் இலங்கைக் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காப்பாற்றப்பட்ட இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் தெரியவருகிறது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் கூறியுள்ளது.

கடற்படையினரால் காப்பற்றப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜைகள் இருவரும் முல்லைத்தீவுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.

வடபகுதியில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையை அறியாமல் இவர்கள் கடலுக்குச் சென்றிருக்கலாம் எனவும், இதனாலேயே இவர்களின் படகு காற்றில் சிக்கியிருக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இவர்களிடம் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மரண அறிவித்தல்:திருமதி பரமநாதர் மனோன்மணி


சாவகச்சேரி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் மனோன்மணி அவர்கள் 13-01-2014 தி்ங்கட்கிழமை அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா சீதேவன் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராமநாதன் வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன், உமாதேவி, ரத்தினகாந்தி, கணேஸ்வரன்(சுவிஸ்), குமரேஸ்வரன்(சுவிஸ்), சியாமளாதேவி, கருணாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சரஸ்வதி, திலகவதி, கமலாத தேவி, மற்றும் தங்கரத்தினம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
மகேஸ்வரி, அழகராசா, சந்திரமூர்தி, புவனேஸ்வரி, சுலோசநாம்பிகை, சிறிஸ்கந்தராசா, குமரேஸ்வரர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தயாபரன், பகீரதன், கயவதனி, சபேசினி, சாந்தினி, சாந்தன், சஞ்சிகா, சயீவன், மீரா, நிலானி, திலக்சன், மிதுனா, கிருசனா, கபிலன், விதுசன், மிதுலன், கர்யனா, கீர்தனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கீர்திகன், அபினா, பிரவீன், சஸ்மிதா, சுபவீன், தரணிகாந், தாட்சாயினி, தேனுகாந், சுமிகா, சுருதிகா, சகானா, சாந்மகிழ்வானி, சாஸ்வதன், சபீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2014திங்கட்கிழமை அன்று  சிறுப்பிட்டி வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு-
  இலங்கை செல்லிடப்பேசி: +94776161736
கணேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41434441891
குமரேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41444925926

வியாழன், 2 ஜனவரி, 2014

தூதரகத்தின் சமூக ஊடக பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

 சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி பட்டறையினை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 "சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமூக ஊடக பட்டறை எனும் புதிய நிகழ்ச்சித் திட்டத்தை அறிவிப்பதில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் பெருமைகொள்கின்றது.

சமூக ஊடக பட்டறை கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையத்தில் நடைபெறவுள்ளது. இங்கு ஆரம்பநிலை, இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய சமூக ஊடக பயற்சி நெறிகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதில் பங்கேற்பதற்காக இன்று வியாழக்கிழமை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

 "கடந்த சில வருட காலப் பகுதியில் நாம் குறிப்பிடத்தக்களவு சமூக ஊடக பயிற்சிகளை நாம் நடத்தியுள்ளோம்" என அமெரிக்க நிலையத்தின் பணிப்பாளர் கிறிஸ்டோபர் ரீல் தெரிவித்தார். "மக்களுக்கு சமூக ஊடகத்தின் சிறப்பம்சங்களை கற்றுத்தருவதற்காக இந்த பயிற்சிகளை நாம் நெறிப்படுத்த விரும்புகின்றோம்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கையர்கள் மத்தியில் சமூக ஊடகம் தொடர்பாக மேம்பட்ட புரிந்துணர்வை ஏற்படுத்துவதுடன் இணையத்தில் மிகவும் சிறப்பான முறையில் மக்கள் செயற்பட ஊக்குவிப்பதே சமூக ஊடக பட்டறையின் மூலம் நாம் அடைய எத்தனிக்கும் பிரதான நோக்கமாகும்.
இந்த சமூக ஊடக பயிற்சி நெறிக்காக எவரேனும் இன்று முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க தூதரக இணையத்தளத்தினுடாக http://goo.gl/1Es2sW விண்ணப்பிக்க முடியும்.

இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. விண்ணப்பங்கள் முதலில் கிடைக்கும் ஒழுங்கில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதுடன் ஜனவரி மாத நடுப் பகுதியில் விண்ணப்பதாரிகளுக்கு பயிற்சிகள் தொடர்பான திகதி மற்றும் நேரங்கள் அறியத்தரப்படும். மேலதீக தகவல்களுக்கு

நவற்கிரி காலநிலை