siruppiddy

செவ்வாய், 15 டிசம்பர், 2015

இலங்கைக்கு மீண்டும்44பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்???

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகத்தால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காலை 6.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை விமானச் சேவைக்குசொந்தமான UL-266 என்ற விமானத்தில் சவுதி அரேபியாவில் இருந்து 44 பேரும், குவைட் விமானச்சேவைக்கு சொந்தமான ku-361 என்ற விமானத்தில் கட்டாருக்கு சென்ற சிலரும்
 வந்தடைந்தனர்.
அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொத்துவில் மற்றும் பொலனறுவை இடங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
நாட்டை வந்தடைந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் திணைக்களம் பணம் கொடுத்து அவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை