siruppiddy

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இன்று 24 மணித்தியாலத்தினுள் 9 வன்முறைச் சம்பவங்கள் ???

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் செயலக தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 892 ஆகும்.
அவற்றில் அதிகம் சட்ட விரோதமான பாதாகைகள், சுவரொட்கள் தொடர்பிலானவைகளாகும், அவை தொடர்பில 190 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு பூராகவும் அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 123 காவல்துறை சுற்றிவளைப்புகளில் 304 பேரும், காவல்துறை தேர்தல் முறைப்பாடு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற 145 முறைப்பாடுகள் தொடர்பில் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை