siruppiddy

ஞாயிறு, 12 ஏப்ரல், 2015

நீரில் எண்ணெய்விடயம் பற்றிய இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே முடிவு ???

 சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ள விடயம் தொடர்பில், இறுதிக்கட்ட ஆய்வின் பின்னரே தீர்க்கமான முடிவை எடுக்க முடியுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நீரில் எண்ணெய் மற்றும் கழிவெண்ணை கலக்கப்பட்டுள்ளமை மக்களால் அவதானிக்கப்பட்ட போதிலும், அதனை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தீர்மானத்திற்கு வர முடியாதென சி.வி விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
சுன்னாகம் நீர்ப் பிரச்சினை தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது, அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர், ஆளுனர், மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை