siruppiddy

புதன், 25 பிப்ரவரி, 2015

அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
திதி : நாள்.25 பெப்ரவரி 2015
யாழ். அச்சுவேலி தோப்பைப்பிறப்பிடமாகவும், நவக்கிரி- தோப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த  நடராஜா அற்புதராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி .25.02.2015. 
ஏழு ஏழு ஜென்மங்கள் ஆனால் என்ன 
எம் உள்ளம் உங்களையே நினைத்தே நிற்கும் 
கண் முன்னே நிற்பது போல் இனிய தோற்றம் 
காணாது தவிக்கின்றோம் எங்கள் அப்பா...  
கண்மூடி விழிப்பதற்குள் கணப்பொழுதில் 
சென்றது ஏன்? கலங்குகின்றோம் 
எண்ணவில்லை நடந்தவைகள் நிஜம் தானா என்று 
நினைக்கும் முன்னே மறைந்து விட்டீர் 
தங்களைத் தான் கனவுதனில் காண நேர்ந்திடில் 
நிஜம் தானதிலே வந்தது போல் நினைவு கொள்கின்றோம் 
என்றும் மறவாத நினைவோடு நாம்..அப்பா...  
உங்கள் பிரிவால் வாடும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
மச்சான்மார்  மச்சாள் மார் ,அண்ணன்மார்,தங்கைமார் ,தம்பிமார் 
மைத்துனன்குடும்பத்தினர். .மைத்துனிகுடும்பத்தினர். சித்தப்பா சித்திமார் குடும்பத்தினர்  பெறாமக்கள் குடும்பத்தினருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்.... ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி 
அமரர் நடராஜா அற்புதராஜா 1ம் ஆண்டு நினைவஞ்சலி  



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

நவற்கிரி காலநிலை